பேட்டரி தயாரிப்பில் Ola Electric-ன் அடுத்தகட்ட நகர்வு!
Ola Electric தனது பேட்டரி துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அதன் துணை நிறுவனமான Ola Cell Technologies-க்கு ஒரு பெரிய முதலீட்டை செய்துள்ளது. மொத்தம் ₹127.64 கோடி மதிப்புள்ள 12.76 கோடி Series A Preference Shares-களை ஒதுக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிதி ஒதுக்கீடு, Ola Electric-ன் உள்நாட்டு பேட்டரி செல் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு முயற்சிகளுக்கு ஒரு முக்கிய உந்துதலாக அமையும். இதன் மூலம், வெளிச்சந்தையை சார்ந்திருக்கும் நிலையை குறைத்து, தங்களது EV-க்களுக்கான முக்கிய பாகங்களை தாங்களே தயாரிக்கும் திறனை Ola Electric மேம்படுத்தி வருகிறது. மேலும், EV Ecosystem-ஐ முழுமையாக உருவாக்குவதே இவர்களின் இலக்கு.
ஏற்கனவே, Ola Electric நிறுவனம் தமிழ்நாட்டில் பேட்டரி உற்பத்திக்கு என பிரம்மாண்டமான Ola Gigafactory-யை அமைத்து வருகிறது. மேலும், Ola Cell Technologies-ல் ஒரு பகுதியை விற்று ₹2,000 கோடி வரை நிதி திரட்டவும் திட்டமிட்டுள்ளது. தற்போது 1.5 GWh ஆக உள்ள லித்தியம்-அயன் செல் உற்பத்தி திறனை 6 GWh ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. NMC மற்றும் LFP போன்ற பேட்டரி தொழில்நுட்பங்களையும் இவர்கள் உருவாக்கி வருகின்றனர்.
இந்த முதலீடு, Ola Cell Technologies-க்கு தேவையான நிதியை வழங்கி, பேட்டரி ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் உற்பத்தி பணிகளை விரைவுபடுத்த உதவும். மேலும், இந்த பங்குகள் எதிர்காலத்தில் ஈக்விட்டியாக மாற்றப்படலாம்.
எனினும், Ola Electric நிறுவனம் சில ஒழுங்குமுறை சவால்களையும், நிர்வாக சிக்கல்களையும் சந்தித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. EV சந்தையில் Ather Energy, TVS Motor Company போன்ற நிறுவனங்களுடனும், பேட்டரி உற்பத்தியில் Reliance Industries, JSW, Tata Agratas, Amara Raja போன்ற நிறுவனங்களுடனும் Ola Electric போட்டியிடுகிறது.
