இரு நாடுகளின் பசுமை ஆற்றல் இலக்குகள்
இந்தப் புதிய ஒப்பந்தம், பூடானில் உள்ள DGPC-க்கு சிறப்புப் பயிற்சிகளை வழங்குவதன் மூலம், அவர்களது பசுமை ஆற்றல் திட்டங்களை செயல்படுத்தத் தேவையான திறமையான மனித வளத்தை உறுதி செய்யும். Tata Power-ன் திறன் மேம்பாட்டு நிறுவனமான TPSDI (Tata Power Skill Development Institute) மூலம் இந்தப் பயிற்சிகள் வழங்கப்படும். இது பூடானின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை அடைவதோடு, இரு நாடுகளுக்குமிடையேயான ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும்.
Tata Power-ன் பங்கு என்ன?
2015-ல் நிறுவப்பட்ட TPSDI, இந்தியாவின் மின்சாரத் துறைக்கான தொழிற்பயிற்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. Tata Power ஏற்கனவே பூடானின் நீர்மின் சக்தித் துறையில், குறிப்பாக டகாச்சு ஹைட்ரோ பவர் ப்ராஜெக்ட்டில் (Dagachhu hydropower project) முதலீடு செய்துள்ளது.
இந்த புதிய ஒப்பந்தத்தின் கீழ், Tata Power தனது நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, பூடானின் ஆற்றல் தேவைகளுக்கான பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும். இதன் மூலம், DGPC-யின் 10 ஆண்டு கால 5,000 MW சூரிய சக்தி (Solar capacity) இலக்கை அடைய உதவும். Tata Power தற்போது 17.5 GW சுத்தமான எரிசக்தி திறனை நிர்வகித்து வருகிறது.
இந்தக் கூட்டு முயற்சி, பூடானில் Tata Power-ன் செயல்பாட்டு இருப்பை மேலும் வலுப்படுத்தி, ஒரு பிரத்யேக திறன் மேம்பாட்டு கட்டமைப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.