மேற்கு வங்காளத்தின் Hooghly மாவட்டத்தில், Mahistikry-ல் Himadri Speciality Chemical Ltd தனது முதல் Anode Material உற்பத்தி ஆலையை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த ஆலை, லித்தியம்-அயன் பேட்டரிகளில் மிக முக்கிய பங்கு வகிக்கும் Anode Material-ஐ உற்பத்தி செய்ய உள்ளது.
இந்த புதிய ஆலையின் ஆரம்பகட்ட உற்பத்தி திறன் ஆண்டொன்றுக்கு 200 மெட்ரிக் டன் ஆகும். இந்த முக்கிய மைல்கல், 10 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு (R&D) பிறகு சாத்தியமாகியுள்ளது.
இந்த நடவடிக்கை, மின்சார வாகனங்களுக்கான (EV) பேட்டரிகள் மற்றும் ஆற்றல் சேமிப்பு அமைப்புகளுக்கான (Energy Storage Systems) வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய தேவையை பூர்த்தி செய்வதில் Himadri-க்கு ஒரு பெரிய வாய்ப்பை வழங்கும். இது நிறுவனத்தின் மேம்பட்ட பேட்டரி பொருட்கள் பிரிவில் (Advanced Battery Materials) அதன் நிலையை மேலும் வலுப்படுத்தும்.
இந்த புதிய Anode Material உற்பத்தி பிரிவு, நிறுவனத்தின் தயாரிப்பு வரிசையை (Product Portfolio) விரிவுபடுத்துவதோடு, எதிர்கால வருவாய்க்கும் (Revenue Streams) குறிப்பிடத்தக்க வகையில் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், Silicon-carbon Anode technology-ஐ இந்தியாவில் கொண்டுவர Sicona Battery Technologies-ல் முதலீடு செய்துள்ளது. 'China Plus One' சப்ளையராக உலக சந்தையில் முக்கிய இடம்பிடிப்பதே நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வையாகும்.
இந்தியாவில் Anode Materials சந்தையில் Epsilon Advanced Materials, Graphite India, TACC Limited போன்ற நிறுவனங்களும் இதேபோல உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன. இந்த போட்டி நிறைந்த சூழலில், Himadri தொடர்ந்து புதுமைகளை புகுத்தவும், திறனை அதிகரிக்கவும் வேண்டியிருக்கும்.
