Lebanon ராணுவம் நடத்திய அதிரடி ரெய்டில், சிரியாவின் முன்னாள் அதிபர் Bashar al-Assad-ன் உறவினர் Suleiman Hilal al-Assad மற்றும் பிரபல கடத்தல்காரர் Nouh Zeiter-ன் மகன் Ali Zeiter ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Lebanon நாட்டின் கிழக்கு நகரமான Baalbek அருகே, ராணுவம் நடத்திய ரகசிய மற்றும் துல்லியமான நடவடிக்கையில் இந்த முக்கிய கைதுகள் நடைபெற்றுள்ளன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ரெய்டில் மொத்தம் 3 பேர் பிடிபட்டுள்ளனர்.
சிக்கிய ஆதாரங்கள்
இந்த சோதனையின் போது, பிடிபட்டவர்களிடம் முறையான அனுமதி பெறாத துப்பாக்கிகள் மற்றும் பெருமளவிலான Hashish எனப்படும் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, இந்த நபர்கள் Lebanon-ன் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டு, தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பிராந்திய பதற்றம்
2024 டிசம்பர் மாதம் சிரியாவில் Assad ஆட்சி வீழ்ந்த பிறகு, சிரியாவிலிருந்து தப்பி வந்த முன்னாள் அரசியல் மற்றும் ராணுவ விசுவாசிகளைக் கட்டுப்படுத்துவது Lebanon அரசுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. பெய்ரூட் அதிகாரிகளைப் பொறுத்தவரை, இது வெறும் குற்றச்செயல் மட்டுமல்ல, நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடைய மிக முக்கியமான விவகாரமாகும்.
Bekaa பள்ளத்தாக்கின் நிலை
Bekaa பள்ளத்தாக்கு பகுதி பல ஆண்டுகளாகவே கடத்தல் கும்பல்களின் பிடியில் சிக்கியுள்ளது. தற்போது இந்த பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும், சட்டவிரோத செயல்களை ஒடுக்கவும் Lebanon ராணுவம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த கைதுகளின் பின்னணியில் இன்னும் பல மர்மங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
