Air India-வின் நிதி நெருக்கடியைச் சரிசெய்ய, டாடா சன்ஸ் நிறுவனம் புதிதாக ₹10,000 கோடிக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
நிதி நெருக்கடியில் Air India
நிர்வாக ரீதியாக Air India கடும் சவால்களைச் சந்தித்து வரும் நிலையில், டாடா சன்ஸ் நிறுவனம் இதற்குத் தேவையான நிதி உதவியை வழங்க முன்வந்துள்ளது. கடந்த FY26 நிதியாண்டில் நிறுவனம் சுமார் ₹22,238 கோடி அளவுக்கு நெட் லாஸைப் பதிவு செய்துள்ளது. மேலும், 11 வங்கிகளிடம் மொத்தம் ₹40,000 கோடி வரை கடன் சுமை உள்ளது. இந்த நிதித் தட்டுப்பாட்டிலிருந்து விடுபடவே இந்த புதிய முதலீட்டுத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
பங்குதாரர்களின் நிலைப்பாடு
Air India-வில் 24.7% பங்குகளை வைத்திருக்கும் Singapore Airlines, இந்த முதலீட்டுச் சுற்றில் பங்கேற்குமா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. ஒருவேளை அவர்கள் பங்கேற்க விரும்பினால், தங்கள் பங்குகளைக் காப்பாற்றிக்கொள்ள சுமார் ₹3,350 கோடி முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இருப்பினும், இது முற்றிலும் அவர்களின் வணிக ரீதியான முடிவு என்று சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
புதிய தலைமை மற்றும் சவால்கள்
நிறுவனத்தின் புதிய CEO மற்றும் மேனேஜிங் டைரக்டராக Tewolde Gebremariam கடந்த ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றுள்ளார். Campbell Wilson-இடமிருந்து பொறுப்புகளைப் பெற்றுள்ள இவருக்கு, விமான எரிபொருள் விலை உயர்வு மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்துப் பாதைகளில் நிலவும் பதற்றம் எனப் பல சவால்கள் காத்திருக்கின்றன. புதிய விமானங்கள் வருகை மற்றும் செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பதன் மூலமே, மீண்டும் லாபப் பாதைக்குத் திரும்ப முடியும் என்பது நிபுணர்களின் கருத்து.
