நிதிநிலை மோசமடைந்த Air India
Air India Group, 2024-25 நிதியாண்டில் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த ஆண்டில், வரிக்கு முந்தைய நஷ்டம் (Consolidated Loss Before Tax) ₹9,568.4 கோடி ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 30% அதிகம். இருப்பினும், குழுமத்தின் வருவாய் (Revenue) 18% அதிகரித்து ₹78,636 கோடி எட்டியுள்ளது. ஆனால், சந்தையின் முன்னணி நிறுவனமான IndiGo-வின் வருவாயான ₹84,098.2 கோடியை விட இது குறைவாகவே உள்ளது.
தனிப்பட்ட முறையில் (Standalone Basis), Air India மற்றும் அதன் இணைந்த Vistara விமான சேவைகளின் நிகர நஷ்டம் (Net Loss) ₹3,976 கோடி ஆகும். குறைந்த கட்டண விமான சேவையான Air India Express-ன் நஷ்டம் ₹5,678.2 கோடி ஆக பதிவாகியுள்ளது. கடந்த மூன்று நிதியாண்டுகளில் Air India Group-ன் மொத்த நஷ்டம் ₹32,210 கோடி-யை தாண்டியுள்ளது. மேலும், Air India-வின் கடன் ₹26,879.6 கோடியாகவும், Air India Express-ன் கடன் ₹617.5 கோடியாகவும் உள்ளது. வரும் 2026 மார்ச் மாதத்திற்குள் Air India-வின் நஷ்டம் ₹21,000 கோடி-யை தாண்டக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
தலைமை மற்றும் ஒழுங்குமுறை சிக்கல்கள்
நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில், தலைமை செயல் அதிகாரியான (CEO) கேம்ப்பல் வில்சன் (Campbell Wilson) ராஜினாமா செய்துள்ளார். 2022-ல் டாடா குழுமத்தின் கீழ் வந்த Air India-வின் மறுசீரமைப்பு பணிகளுக்கு இது ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மேலும், பிப்ரவரி 2026-ல், விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான DGCA, Air India-வுக்கு ₹1 கோடி அபராதம் விதித்துள்ளது. கடந்த 2025-ன் இறுதியில், உரிய Airworthiness Review Certificate (ARC) இல்லாமல் ஒரு Airbus A320 விமானத்தை இயக்கினார்களாம். Air India தாமாகவே இந்த சிக்கலை அறிவித்து, சரிசெய்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
ஜூன் 12, 2025 அன்று AI 171 விமானம் விபத்துக்குள்ளான சம்பவமும் (260 பேர் உயிரிழந்தனர்) விமான நிறுவனத்திற்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆரம்பக்கட்ட அறிக்கைகள் எரிபொருள் கட்டுப்பாட்டு ஸ்விட்சுகளில் (fuel control switches) பிரச்சனை இருந்திருக்கலாம் என்று சந்தேகித்தாலும், விமான நிறுவனத்தின் செயல்பாடுகளில் தவறு இல்லை என CEO அக்டோபர் 2025-ல் தெரிவித்திருந்தார்.
விரிவாக்கத் திட்டங்களுக்கு நிதி நெருக்கடி
டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் (N. Chandrasekaran), ஊழியர்களை 'இந்த சவாலான நேரத்தில்execution-ல் கவனம் செலுத்துங்கள்' என்று வலியுறுத்தியுள்ளார். செலவுகளைக் கட்டுப்படுத்துவது மற்றும் செயல்பாட்டுத் துல்லியத்தை அதிகரிப்பது அவசியம் என கூறியுள்ளார்.
ஆனால், Air India-வின் அதிரடி விரிவாக்கத் திட்டங்கள், அதாவது 470 புதிய விமானங்களுக்கான ஆர்டர்கள், பெரும் செலவை ஏற்படுத்துகின்றன. மத்திய கிழக்கு மோதல்கள் (Middle East conflicts), வான்வெளி மூடல்கள் (airspace closures) போன்ற காரணங்களால் விமானப் பயண நேரம் அதிகரித்துள்ளது. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க வழித்தடங்களில் இயக்கச் செலவுகள் கூடியுள்ளன.
விமானங்கள் டெலிவரி ஆவதில் தாமதம் மற்றும் விநியோகச் சங்கிலி சிக்கல்களும் (supply chain issues) விமானங்களை மேம்படுத்தும் பணியை தாமதப்படுத்துகின்றன. இதன் காரணமாக, Air India Group தங்களின் உரிமையாளர்களான Tata Sons மற்றும் Singapore Airlines-ல் இருந்து சுமார் ₹10,000 கோடி ($1.1 பில்லியன்) கூடுதல் முதலீட்டை எதிர்பார்க்கிறது. இந்த நிதி, விமான நிறுவனத்தை நவீனமயமாக்கவும், கட்டமைப்பை மேம்படுத்தவும் தேவைப்படுகிறது.