இந்தியாவின் விமானப் போக்குவரத்து கனவு
இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு இந்த புதிய மாதிரிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். தற்போது சுமார் 35% இந்திய சர்வதேசப் பயணிகள் துபாய், லண்டன், சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டு மையங்கள் வழியாகச் செல்வதைத் தவிர்க்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற முக்கிய இந்திய விமான நிலையங்களை உலகளாவிய போக்குவரத்து மையங்களாக மாற்றுவதே இதன் இலக்கு.
'Hub-and-spoke' மாடலின் அவசியம்
இந்த புதிய உத்தி, இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் உள்ள பயணிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தை எளிதாக்கும். சிறிய விமான நிலையங்களில் இருந்து சர்வதேச இலக்குகளுக்கு சீரான இணைப்பை ஏற்படுத்துவதே 'Hub-and-spoke' மாதிரியின் முக்கிய நோக்கமாகும். இது UDAN போன்ற திட்டங்களுடனும் ஒருங்கிணைக்கப்படலாம்.
Air India-வின் பார்வை
Air India-வின் CEO & Managing Director கேம்ப்பல் வில்சன், இந்த மாற்றத்தை 'இந்திய விமானப் போக்குவரத்துக்கான ஒரு புரட்சிகரமான படி' என்று குறிப்பிட்டுள்ளார். 'Hub-and-spoke' மாதிரி இணைப்பை மேம்படுத்துவதோடு, நாட்டின் விமான நிலைய உள்கட்டமைப்பை திறம்பட பயன்படுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், முக்கிய நகரங்களுக்கு அப்பாலும் சேவைகளை விரிவுபடுத்துவது பயண நேரத்தைக் குறைத்து, பல பயணிகளுக்கு சர்வதேசப் பயணத்தை எளிதாக்கும் என Air India-வின் P Balaji கூறியுள்ளார்.
