Manchester Airports Group நிறுவனத்தின் டேட்டாபேஸில் ஏற்பட்ட சைபர் தாக்குதலால், சுமார் 8.7 மில்லியன் பயணிகளின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளன. எனினும், வங்கி கணக்குகள் பாதுகாப்பாக இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
லண்டனின் முக்கிய விமான நிலையங்களை நிர்வகிக்கும் Manchester Airports Group (MAG)-ல் பெரும் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 25, 2026 அன்று கண்டறியப்பட்ட இந்த சைபர் தாக்குதலில், சுமார் 8.7 மில்லியன் பயணிகளின் தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளன.
எதெல்லாம் திருடப்பட்டது?
பயணிகளின் ஈமெயில் முகவரிகள், போன் நம்பர்கள், வாகன பதிவு எண்கள் மற்றும் போஸ்டல் கோடு உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இதில் அடங்கும். இவர்கள் ஏர்போர்ட் பார்க்கிங், லவுஞ்ச் வசதிகள் மற்றும் வைஃபை (Wi-Fi) பயன்படுத்தியபோது கொடுத்த விவரங்களே இந்த தாக்குதலில் சிக்கியுள்ளன.
கவலைப்பட வேண்டாமா?
நிறுவனம் வெளியிட்ட தகவல்படி, பயணிகளின் வங்கி கணக்கு விவரங்கள் அல்லது பேமெண்ட் கார்டு எண்கள் ஹேக்கர்களிடம் சிக்கவில்லை என்பது நிம்மதி தரும் விஷயம். விமான செயல்பாடுகள், பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் அன்றாட விமான சேவைகளில் எந்த இடையூறும் இல்லை என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அடுத்து என்ன?
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 'Manage My Booking' ஆன்லைன் சேவையை நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தால் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படலாம் என்றும், வரும் நாட்களில் கடுமையான ரெகுலேட்டரி விசாரணைகளை நிறுவனம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் சந்தை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் அறிமுகமில்லாத நபர்களிடம் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
