L&T Semiconductor Technologies மற்றும் Tata Electronics நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன. டிசைன் முதல் மேனுஃபேக்ச்சரிங் வரை இனி இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள செமிகண்டக்டர் சிப்ஸ்.
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான L&T மற்றும் Tata Electronics செமிகண்டக்டர் தயாரிப்பில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளன. இந்த கூட்டணியின் கீழ், சிப் டிசைனிங் பணிகளை L&T Semiconductor Technologies கவனிக்கும், அதேநேரம் மேனுஃபேக்ச்சரிங், பேக்கேஜிங் மற்றும் டெஸ்டிங் பணிகளை Tata Electronics மேற்கொள்ளும்.
நோக்கம் என்ன?
இந்த கூட்டு முயற்சியின் முக்கிய நோக்கம், ஆட்டோமொபைல், கம்யூனிகேஷன் மற்றும் இண்டஸ்ட்ரியல் போன்ற துறைகளுக்கு தேவையான சிப்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதாகும். தற்போது இந்தியா சிப்களுக்காக வெளிநாடுகளை நம்பியிருக்கும் நிலையில், இந்த முயற்சி ஒரு 'End-to-End' சூழலை உருவாக்கும்.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை
செமிகண்டக்டர் தயாரிப்பு என்பது அதிக மூலதனம் தேவைப்படும் (Capital Intensive) ஒரு தொழில். உலகளவில் தைவான், தென் கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகள் இதில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. எனவே, இந்த கூட்டணி சந்தையில் எவ்வளவு வேகத்தில் நிலைபெறுகிறது என்பது முக்கியம்.
தயாரிப்பு தொடங்கும் காலம், உற்பத்தி செலவு மற்றும் ஆர்டர் புக் (Order Book) விவரங்களை பொறுத்தே இந்த நிறுவனங்களின் லாபம் தீர்மானிக்கப்படும். எதிர்காலத்தில் இந்த ப்ராஜெக்ட் இந்திய சந்தையின் சப்ளை செயினை எவ்வாறு மாற்றப்போகிறது என்பதே தற்போதைய பெரிய எதிர்பார்ப்பு.
