AI தொழில்நுட்பத்தால் மனிதர்களின் வேலை பறிபோவதைத் தடுக்க, 'Human Reserved' எனும் புதிய வகை வேலைவாய்ப்பு மண்டலங்களை உருவாக்க வேண்டும் என Microsoft நிறுவனர் Bill Gates யோசனை தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் இதற்கான கட்டுப்பாடுகள் தேவை என அவர் வலியுறுத்துவது, தொழில்நுட்ப நிறுவனங்களின் எதிர்கால செயல்பாடுகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி குறித்து கவலை தெரிவித்துள்ள Microsoft நிறுவனர் Bill Gates, மனிதர்களின் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க 'Human Reserved' (மனிதர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட வேலைகள்) என்ற கருத்தாக்கத்தை முன்வைத்துள்ளார். அதாவது, அதிக உணர்வுப்பூர்வமான முடிவுகள் மற்றும் உடல் உழைப்பு தேவைப்படும் துறைகளை, முழுமையாக AI வசம் ஒப்படைக்காமல் பாதுகாக்க வேண்டும் என்கிறார் அவர்.
இயற்கைப் பூங்காக்களைப் போல வேலைகளும்...
இயற்கைப் பாதுகாப்பிற்காக எப்படி நாம் வனப்பகுதிகளை ஒதுக்குகிறோமோ, அதுபோலவே மனித உழைப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது அவரது வாதம். குறிப்பாக, ஹெல்த்கேர், திறன் சார்ந்த தொழில்கள் மற்றும் மேனேஜ்மெண்ட் துறைகளை AI ஆதிக்கத்திலிருந்து தனித்து வைக்க வேண்டியது அவசியம் என்கிறார். வேலையின்மை பிரச்னையைத் தவிர்க்க இதுவே சிறந்த வழி என்பது அவரது கருத்து.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!
இந்த யோசனை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு புதிய சவால்களைக் கொடுக்கலாம். இதுவரை AI-ஆல் லாபம் அதிகரிக்கும் என்று பார்த்த நிறுவனங்கள், இனி புதிய சட்டதிட்டங்கள் மற்றும் வரிகளைச் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகலாம். உலகளாவிய அளவில் அணுசக்தி அல்லது விமான போக்குவரத்துத் துறைக்கு இருப்பது போன்ற ஒரு வலுவான ஒழுங்குமுறை அமைப்பு (Regulatory Body) AI-க்கும் தேவை என்று Gates வலியுறுத்தியுள்ளார்.
என்ன பாதிப்பு ஏற்படும்?
கடுமையான தொழிலாளர் சட்டங்கள் கொண்டுவரப்பட்டால், அது நிறுவனங்களின் செயல்பாட்டு செலவுகளை (Operational Costs) அதிகரிக்கலாம். அதே சமயம், கட்டுப்பாடு இல்லாத AI வளர்ச்சி சைபர் தாக்குதல் (Cyberattack) போன்ற ஆபத்துகளையும் உருவாக்கும் என்பதால், சர்வதேச அளவில் சட்டதிட்டங்கள் வருவது தவிர்க்க முடியாததாகிறது. இனிவரும் காலங்களில் உலக நாடுகள் இது குறித்து எடுக்கும் முடிவுகளே டெக் நிறுவனங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
