Gen Z-ன் புதிய கனவு: உடனடி ஸ்டார்ட்அப்!
முன்பெல்லாம், வேலை அனுபவம் பெற்ற பிறகோ அல்லது வேறு வழியில்லாமலோ தான் பலர் ஸ்டார்ட்அப் தொடங்க நினைப்பார்கள். ஆனால், Gen Z தலைமுறைக்கு இது முற்றிலும் மாறிவிட்டது. 'ஷாக் டேங்க் இந்தியா' போன்ற நிகழ்ச்சிகள் மற்றும் சக நண்பர்களின் வெற்றிக் கதைகளால் உத்வேகம் பெற்று, மாணவர்கள் இப்போது படிக்கும்போதே நிறுவனங்களைத் தொடங்குவதை ஒரு எளிய இலக்காகக் கருதுகிறார்கள். ஒரு மாணவருக்கும், ஒரு ஃபவுண்டருக்கும் இடையிலான இடைவெளி வெகுவாகக் குறைந்துவிட்டது.
பல்கலைக்கழங்களே இனி முதலீட்டு மையங்கள்!
பல முன்னோடிப் பல்கலைக்கழங்கள், வெறும் கல்விக்கூடங்களாக இல்லாமல், ஆரம்பக்கட்ட முதலீட்டு மையங்களாக (early-stage venture hubs) மாறி வருகின்றன. இதற்கு வலுவான இன்குபேஷன் வசதிகள், அனுபவம் வாய்ந்த மென்டார்கள், முதலீட்டாளர் நெட்வொர்க்குகள், தோல்விகளைக் கண்டு துவளாமல் கற்றுக் கொள்ளும் கலாச்சாரம் ஆகியவை தேவை. சில நிறுவனங்கள் மட்டுமே இந்த விஷயத்தில் தீவிரமாக முதலீடு செய்து வருகின்றன.
சித்காரா பல்கலைக்கழத்தின் சாதனை!
சித்காரா பல்கலைக்கழம், 320-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்-களை உருவாக்கியுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ₹750 கோடி-க்கும் அதிகம். மேலும், ₹85 கோடி-க்கும் மேல் வெளி முதலீட்டை ஈர்த்து, 3,500 பேருக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கியுள்ளது. பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட ஒரு வலுவான கட்டமைப்பின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. இவர்களது வசதிகளில் கோ-வர்கிங் ஸ்பேஸ், டெக் லேப்கள், புரோட்டோடைப்பிங் வசதிகள், சீட் ஃபண்டிங் (seed funding) வாய்ப்புகள் அடங்கும். மேலும், கஜல் அலக், விநீதா சிங் போன்ற பிரபலங்கள் மென்டார்களாக வந்து மாணவர்களுக்கு யதார்த்தமான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
மாணவர்களின் ஸ்டார்ட்அப்-கள் அசத்தும் வருவாய்!
சாய்நாகரி (ChaiNagri) போன்ற ஸ்டார்ட்அப்-கள் 30-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் ₹4 கோடி ரெவென்யூ-வை எட்டியுள்ளன. அதேபோல், AI ஸ்டார்ட்அப் செல்லிப்ரேஷன் (Sellebration) இந்தியாவின் டாப் 20 ப்ராமிஸிங் ஸ்டார்ட்அப்-களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த சூழல், மாணவர்களிடம் சந்தை இடைவெளிகளைக் கண்டறிந்து, அதற்கான தீர்வுகளை உருவாக்கும் மனப்பான்மையை வளர்க்கிறது. இது இன்று பல நிறுவனங்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் திறமையாகும்.
எதிர்கால கண்டுபிடிப்பாளர்களுக்கான திறன்கள்!
தொழில்முனைவு கலாச்சாரத்தை வளர்க்கும் பல்கலைக்கழங்கள், பிரச்சனைகளைக் கண்டறிதல், தீர்வுகளைச் சோதித்தல், புதிதாக உருவாக்குதல் போன்ற மாற்றத்தக்க திறன்களை மாணவர்களுக்கு வழங்குகின்றன. இந்தப் பண்புகள் எந்தவொரு பணிச்சூழலிலும் மிகவும் மதிப்புமிக்கவை. இந்த அணுகுமுறை, மாணவர்களை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் சிக்கல் தீர்ப்பவர்களாக மாற்றுகிறது.