செப்டம்பர் 24 அன்று நடைபெறவுள்ள SEBI வாரிய கூட்டத்தில், சட்ட சிக்கல்களை வேகமாகவும் சுலபமாகவும் முடிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் PMS, FPI முதலீட்டாளர்களுக்கான புதிய விதிகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான SEBI, வரும் செப்டம்பர் 24, 2026 அன்று மிக முக்கியமான வாரிய கூட்டத்தை நடத்த உள்ளது. இந்த கூட்டத்தில் முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை செயல்பாடுகள் சார்ந்த பல்வேறு சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
செட்டில்மெண்ட் விதிகளில் மாற்றம்
தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, ₹10 லட்சம் வரை அபராதம் கொண்ட வழக்குகளுக்கு 'Fast-track' முறையை அறிமுகப்படுத்த SEBI திட்டமிட்டுள்ளது. மேலும், நீதிமன்றங்களில் (Securities Appellate Tribunal/Supreme Court) நிலுவையில் உள்ள வழக்குகளை செட்டில்மெண்ட் செய்ய அனுமதிப்பதன் மூலம், தேவையற்ற சட்டப் போராட்டங்கள் தவிர்க்கப்படும். இது தவிர, செட்டில்மெண்ட் விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் 60 நாட்களிலிருந்து 90 நாட்களாக அதிகரிக்கவும், மீண்டும் விண்ணப்பிப்பதற்கான அபராதத்தை 50%-லிருந்து 20%-ஆக குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
PMS மற்றும் FPI முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு
Portfolio Management Services (PMS)-ல் புதிய மாற்றங்கள் வரவுள்ளன. குறிப்பாக, 'Mutual-fund-only' என்ற புதிய பிரிவை உருவாக்குவது மற்றும் Discretionary மேலாளர்கள் தங்கள் நிதியில் 10% வரை முதலீட்டு தரம் கொண்ட (Investment-grade) அன்லிஸ்டட் கடன்பத்திரங்களில் (Unlisted Debt) முதலீடு செய்ய அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
மேலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FPI) கமாடிட்டி சந்தைகளில் அதிக அளவில் பங்கேற்க அனுமதிப்பதன் மூலம், சந்தையில் லிக்விடிட்டி (Liquidity) அதிகரிக்க வழிவகை செய்யப்படும். இவை தவிர, REITs மற்றும் InvITs பத்திரங்களை சர்வதேச சந்தைகளில் வர்த்தகம் செய்வது மற்றும் விளம்பரங்களுக்கான புதிய விதிகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
