மெட்ரோ நகரங்களுக்கு ஒரு சவால்
பெரிய நகரங்களான Tier-I-ல் வீடு வாங்கும் செலவு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. 2022 முதல் 2024 வரை, இந்த நகரங்களில் வீடுகளின் விலை சம்பள உயர்வை விட வேகமாக உயர்ந்துள்ளது. இதனால், ஒரு சதுர அடி சராசரியாக ₹11,000 ஆக உள்ளது. இது பலருக்கும் கட்டுபடியாகாத விலையாக மாறியுள்ளது.
சிறு நகரங்கள் தரும் நம்பிக்கை
இதற்கு மாறாக, Tier-II மற்றும் Tier-III நகரங்களில் வளர்ச்சி சீராக இருக்கிறது. இங்கு வீடு வாங்கும் ஆரம்பகட்ட செலவு குறைவு, மேலும் விலை-வருமான விகிதம் (Price-to-Income Ratio) சிறப்பாக உள்ளது. இதனால், சாதாரண மக்களும் வீடு வாங்க முடிகிறது. மேலும், ஸ்மார்ட் சிட்டி மிஷன், AMRUT போன்ற அரசாங்க திட்டங்களால் இங்கு உள்கட்டமைப்பு மேம்பாடு, சாலைகள், நெட்வொர்க் வசதிகள் பெருகி வருகின்றன.
வேலைவாய்ப்பு அதிகரிப்பு
முக்கியமாக, மெட்ரோ அல்லாத நகரங்களில் வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன. குறிப்பாக Tier-III நகரங்கள் 40% வேலைவாய்ப்புகளை ஈர்க்கின்றன. அதைத் தொடர்ந்து Tier-II நகரங்கள் 29% வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளன. IT, உற்பத்தி, லாஜிஸ்டிக்ஸ் போன்ற துறைகளில் ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சி, இந்த வளர்ந்து வரும் நகரங்களில் வீடு வாங்கும் தேவையை அதிகரித்துள்ளது. 2026 வாக்கில், Tier-II நகரங்கள் மேலும் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெவலப்பர்கள் கவனம்
DLF, லோதா டெவலப்பர்ஸ், கோத்ரெஜ் ப்ராப்பர்டீஸ் போன்ற பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் Tier-II மற்றும் Tier-III நகரங்களில் அதிக கவனம் செலுத்துகின்றன. ஏனென்றால், இங்கு நிலத்தின் விலை குறைவாக உள்ளது மற்றும் உள்ளூர் தேவையும் அதிகமாக இருக்கிறது. இதனால், புதிய ப்ராஜெக்ட்கள் லாபகரமாக அமைகின்றன. 2026 முதல் 2028 வரை, பெரிய நகரங்களை விட இப்பகுதிகளில் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் projected GDP வளர்ச்சி 7.5% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கவனிக்க வேண்டியவை
சிறிய நகரங்களில் திடீரென விலை அதிகமாக உயர்ந்து, அங்கேயும் கட்டுபடியாகாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், உலகளாவிய பிரச்சனைகளால் பணவீக்கம் உயர்ந்து, ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தினால், அது வீட்டுக்கடன் வாங்குவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மூலப்பொருட்கள் விலை உயர்வு, உள்கட்டமைப்பு திட்டங்களில் தாமதம் போன்றவையும் சவால்களாக இருக்கலாம்.
எதிர்கால கணிப்பு
இருப்பினும், நிபுணர்கள் Tier-II மற்றும் Tier-III நகரங்களின் வளர்ச்சி தொடரும் என நம்புகின்றனர். வேலைவாய்ப்பு பெருக்கம் மற்றும் அரசாங்க திட்டங்கள் இதற்கு உறுதுணையாக இருக்கும். 2026-ல் வீடு விலைகள் சீராக உயரும் என்றும், வட்டி விகிதக் குறைப்பு நடுத்தர வர்க்கத்தினருக்கு பயனளிக்கும் என்றும் Cushman & Wakefield கணித்துள்ளது. PM Gati Shakti திட்டம் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்கள் இந்த நகரங்களின் சொத்து மதிப்பை மேலும் அதிகரிக்கும்.
