வருமான வரியில் முழு விவரங்களையும் வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டால், வருமானத்தை மறைத்ததாகக் கூறி வரித்துறை அபராதம் (Penalty) விதிக்க முடியாது என ITAT டெல்லி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
வருமான வரித் துறையினருக்கும், வரி செலுத்துவோருக்கும் இடையே நிலவும் நீண்டகால குழப்பத்திற்கு ITAT டெல்லி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. வரி ஒப்பந்த சலுகைகள் (Tax Treaty Benefits) குறித்த விவாதங்கள் இருக்கும்போது, வருமானத்தை முறையாக வெளிப்படுத்தியிருந்தால், அந்த வரி செலுத்துவோர் மீது Section 270A-ன் கீழ் அபராதம் விதிக்க முடியாது என இந்த தீர்ப்பு கூறுகிறது.
இந்தத் தீர்ப்பின் பின்னணி என்ன?
இந்த விவகாரம், இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் (India-UAE) இடையிலான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தின் (DTAA) கீழ் வரி விகிதத்தை கோரிய ஒரு வரி செலுத்துவோர் சம்பந்தப்பட்டது. வருமான வரித்துறை இந்தத் தொகையை 'வருமானத்தை மறைத்ததாக' (Under-reporting) கருதி அபராதம் விதிக்க முயன்றது. ஆனால், அந்த நபர் தனது ஒரிஜினல் ஃபைலிங்கிலேயே அந்த வட்டி வருமானம் குறித்த முழு விவரங்களையும் கொடுத்திருப்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
வரி செலுத்துவோருக்கு ஏன் இது முக்கியம்?
வரி சட்டங்களை எப்படிப் புரிந்துகொள்வது என்பதில் உள்ள கருத்து வேறுபாடுகளை, வருமானத்தை மறைத்ததாகவோ அல்லது தவறாகக் காட்டியதாகவோ எடுத்துக்கொள்ள முடியாது என்று தீர்ப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. Section 270A-ன் கீழ் உள்ள அபராத நடவடிக்கைகள், உண்மைகளை மறைப்பவர்களுக்கு அல்லது தவறான தரவுகளைத் தருபவர்களுக்கு மட்டுமேயே தவிர, சட்ட ரீதியான கருத்து வேறுபாடுகளுக்கு அல்ல.
எனவே, இனி வரும் காலங்களில் வரி தாக்கல் செய்யும் போது, வருமான ஆதாரங்களை மிகத் தெளிவாகவும், வெளிப்படையாகவும் சமர்ப்பிப்பது மிக முக்கியம். உங்களின் அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும்பட்சத்தில், வரித்துறை அதிகாரிகள் உங்கள் வரிச் சலுகை கோரிக்கையை நிராகரித்தாலும், அபராதம் விதிக்க முடியாது என்பதை இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது.
