பலர் லோன் செட்டில்மெண்ட் செய்வதை, கடனை அடைத்துவிட்டதாக தவறாக நினைக்கிறார்கள். ஆனால், இந்த 'Settled' டேக் உங்கள் எதிர்கால கடன் வாய்ப்புகளை முடக்கும் ஒரு பெரிய சிவப்பு கொடி (Red Flag).
இந்திய வங்கி நடைமுறையில், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறும் வாடிக்கையாளர்கள், வங்கியுடன் சமரசம் செய்து கொண்டு நிலுவைத் தொகையை விடக் குறைவாகப் பணத்தைச் செலுத்தி கடனை முடிப்பார்கள். இதுதான் 'Settled' என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இது உங்கள் நிதி வரலாற்றில் ஒரு கறையாக மாறிவிடும் என்பது பலருக்குத் தெரிவதில்லை.
ஏன் 'Settled' ஆபத்தானது?
நீங்கள் ஒரு கடனை முழுமையாக அடைத்துவிட்டால் (Closed), அந்த நபர் நேர்மையானவர் என்று வங்கிகள் நம்பும். ஆனால், 'Settled' என்பது, நீங்கள் ஒப்பந்தப்படி முழுப் பணத்தையும் செலுத்தவில்லை என்பதை உணர்த்துகிறது. இதனால், வருமானம் அதிகமாக இருந்தாலும், வங்கிகள் உங்கள் புதிய லோன் அல்லது கிரெடிட் கார்டு விண்ணப்பங்களை உடனடியாக நிராகரிக்க வாய்ப்புள்ளது.
இதை சரிசெய்வது எப்படி?
கவலைப்பட வேண்டாம், 'Settled' என்பதை மாற்ற வாய்ப்புள்ளது:
- மீதிப் பணத்தைச் செலுத்துங்கள்: வங்கி தள்ளுபடி செய்த மீதித் தொகையை நீங்கள் செலுத்தி, கடனை முழுமையாக க்ளோஸ் செய்ய வேண்டும்.
- NOC பெறுங்கள்: பணம் செலுத்திய பிறகு வங்கியிடமிருந்து கண்டிப்பாக 'No Objection Certificate' (NOC) அல்லது செட்டில்மெண்ட் கடிதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
- CIBIL அப்டேட்: வங்கி இந்தத் தகவலை CIBIL, Equifax அல்லது Experian போன்ற கிரெடிட் பீரோக்களுக்கு அனுப்ப வேண்டும். இதற்கு பொதுவாக 15 முதல் 30 நாட்கள் ஆகும்.
இந்த காலக்கட்டத்தில் உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டைத் தொடர்ந்து கண்காணிக்கவும். ஸ்டேட்டஸ் மாறவில்லை என்றால், கிரெடிட் பீரோவிடம் முறையான புகார் அளிக்க உங்களுக்கு உரிமை உண்டு. எதிர்காலத்தில் நிம்மதியான நிதி வாழ்க்கைக்கு இந்த 'Closed' ஸ்டேட்டஸ் மிகவும் அவசியம்.
