சேமிப்பு கணக்கில் (Savings Account) அதிகப்படியான பணத்தை வைத்திருப்பது பணவீக்கத்தால் உங்கள் வாங்கும் திறனை (Purchasing Power) குறைக்கும். 3 முதல் 6 மாத செலவுகளுக்கு மட்டும் அவசர நிதியை (Emergency Fund) வைத்துவிட்டு, மீதி பணத்தை மியூச்சுவல் ஃபண்ட் அல்லது எஃப்.டி-களில் முதலீடு செய்ய நிதி நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
வங்கி சேமிப்பு கணக்கில் பணத்தை வைத்திருப்பது பாதுகாப்பாகத் தோன்றலாம், ஆனால் நீண்ட கால அடிப்படையில் அது உங்கள் செல்வத்தை குறைக்கும் செயலாக மாறக்கூடும். பணவீக்கம் (Inflation) உயரும்போது, உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தின் மதிப்பு மெல்ல மெல்ல குறையத் தொடங்கும். வங்கிகள் தரும் வட்டி விகிதத்தை விட பணவீக்கம் அதிகமாக இருக்கும்போது, உங்கள் பணத்தின் உண்மையான வாங்கும் திறன் (Purchasing Power) வீழ்ச்சியடையும்.
எமர்ஜென்சி ஃபண்ட் - எவ்வளவு முக்கியம்?
நிதித் திட்டமிடுபவர்கள் கூறுவது என்னவென்றால், அவசரத் தேவைகளுக்காக மட்டும் பணம் கையில் இருக்க வேண்டும். அதாவது உங்கள் குடும்பத்தின் 3 முதல் 6 மாத கால செலவுகளுக்குத் தேவையான பணத்தை மட்டும் எமர்ஜென்சி ஃபண்டாக வைத்துக்கொள்ளுங்கள். இது எதிர்பாராத நேரங்களில் முதலீடுகளை விற்க வேண்டிய கட்டாயத்தைத் தவிர்க்க உதவும்.
முதலீடு தரும் அதிரடி மாற்றம்
உதாரணமாக, உங்களிடம் ₹15 லட்சம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இதை சேமிப்பு கணக்கிலேயே வைத்திருந்தால் வளர்ச்சி இருக்காது. அதுவே:
- 8% வட்டி தரும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் (FD) போட்டால், 8 ஆண்டுகளில் அது ₹27.7 லட்சம் ஆக வளரும்.
- அதே பணத்தை பங்குச்சந்தை சார்ந்த ஈக்விட்டி (Equity) முதலீடுகளில் 12% வருமானம் கிடைக்கும் வகையில் முதலீடு செய்தால், அது ₹37.1 லட்சம் வரை உயர வாய்ப்புள்ளது.
உங்கள் போர்ட்ஃபோலியோவை எப்படி அமைப்பது?
எல்லா பணத்தையும் ஒரே இடத்தில் முதலீடு செய்யாமல், தேவைகளுக்கு ஏற்ப பிரிக்க வேண்டும். குறுகிய கால தேவைகளுக்கு FD அல்லது Debt Instruments சிறந்தவை. நீண்ட கால செல்வத்தை பெருக்க மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் ஈக்விட்டி முதலீடுகள் சிறந்தவை. மேலும், அரசாங்கத்தின் சிறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் Public Provident Fund (PPF) போன்ற பாதுகாப்பான முதலீடுகளையும் உங்கள் போர்ட்ஃபோலியோவில் இணைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு ரூபாய்க்கும் ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்பதே புத்திசாலித்தனமான முதலீட்டாளரின் அடையாளம்.
