ஜம்மு காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் நடைபெற்ற 'Operation Ashdar' ராணுவ நடவடிக்கையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் தீவிரவாத எதிர்ப்புப் படை நடத்திய அதிரடி வேட்டையில், பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார். 'யாசிர்' என்று அடையாளம் காணப்பட்ட இந்த நபர், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தேடுதல் வேட்டையானது 'Operation Ashdar' என்ற பெயரில், ஸ்பெஷல் ஆபரேஷன்ஸ் குரூப் (SOG), ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் செஜ்தார் (Seoj Dhar) பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து இரவு நேரத்திலும் பயன்படுத்தக்கூடிய M4 கார்பைன் ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இத்தகைய ஆயுதங்கள் எல்லை தாண்டி கடத்தப்படுவது, பாதுகாப்பு படையினருக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இந்த ஆயுதத்தை முறியடித்ததன் மூலம், பெரும் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டுள்ளன.
தற்போது செனாப் பள்ளத்தாக்கு பகுதி மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்ட தீவிரவாதிக்கு உதவிய உள்ளூர் ஆதரவாளர்களைக் கண்டறியும் பணியில் உளவுத்துறை ஈடுபட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊடுருவலைத் தடுக்கவும், இதுபோன்ற நவீன ஆயுதங்களை முறியடிக்கவும் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் உள்ளனர்.
