ஆகஸ்ட் 4, 2026 அன்று வெள்ளை மாளிகையில் நடந்த கட்டுமானப் பணிகள் காரணமாக, விமானப் போக்குவரத்துத் தொடர்பில் ஏற்பட்ட தடங்கலால் Marine One ஹெலிகாப்டர் மோதும் அபாயத்தில் இருந்து நூலிழையில் தப்பியது. இந்தத் தொழில்நுட்பக் குளறுபடியை NTSB உறுதி செய்துள்ளது.
அமெரிக்காவின் முக்கிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமான NTSB, ஆகஸ்ட் 4, 2026 அன்று வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையத்தில் நடந்த விபத்து குறித்த அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதிபரின் ஹெலிகாப்டரான Marine One மற்றும் ஒரு வர்த்தக விமானம் (Envoy Air jet) மோதும் சூழல் உருவானதற்கு வெள்ளை மாளிகையில் நடந்து வந்த கட்டுமானப் பணிகளே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
வெள்ளை மாளிகை கட்டுமானப் பணிகளால், Marine One தனது பயணத்தைத் தற்காலிகமாக 'எலிப்ஸ்' (Ellipse) பகுதிக்கு மாற்றியது. இதனால், அந்தப் பகுதியில் ரேடியோ சிக்னல்கள் தடுமாறியுள்ளன. விமானக் கட்டுப்பாட்டு அறைக்குத் தேவையான 3 நிமிட முன் அறிவிப்பு கிடைக்காததால், அதே வழித்தடத்தில் செல்ல வர்த்தக விமானத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
விபத்து தடுத்த நிகழ்வு
விமானத்தின் Cockpit Traffic Collision Avoidance System கொடுத்த எச்சரிக்கையாலும், பைலட்டுகள் சரியான நேரத்தில் ஹெலிகாப்டரை காற்றில் நிறுத்தியதாலும் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. விமானங்களுக்கு இடையே பக்கவாட்டில் 0.8 மைல் மற்றும் உயரத்தில் 700 அடி இடைவெளி மட்டுமே இருந்தது.
FAA எடுத்த நடவடிக்கை
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அமெரிக்காவின் விமான போக்குவரத்து ஆணையம் (FAA), ரேடியோ ரிசீவர்களை ஏர்போர்ட் கண்ட்ரோல் டவர் உச்சிக்கு மாற்றியுள்ளது. இதன் மூலம் சிக்னல் தடைகள் நீக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இத்தகைய உயர் பாதுகாப்பு பயணங்களின் போது கூடுதல் கவனத்துடன் செயல்பட ஏஜென்சிகள் திட்டமிட்டுள்ளன.
