2026-ஆம் ஆண்டு NEET-UG தேர்வு சர்ச்சையைத் தொடர்ந்து, NTA நிர்வாகத்தில் மத்திய அரசு பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. ஐந்து மூத்த அதிகாரிகளை நியமித்துள்ளதோடு, நான்கு அடுக்கு சரிபார்ப்பு முறை உள்ளிட்ட புதிய பாதுகாப்பு அம்சங்களையும் அமல்படுத்தியுள்ளது.
NEET-UG 2026 தேர்வு குறித்த சர்ச்சைகள் மற்றும் அதைத் தொடர்ந்து எழுந்த பொதுமக்களின் எதிர்ப்பால், கல்வித்துறை அமைச்சர் பதவி விலகிய சூழலில், NTA எனப்படும் தேசிய தேர்வு முகமையில் மத்திய அரசு முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. இதன்படி, அன்சுமான் சர்மா ஜாயிண்ட் செக்ரட்டரியாகவும், சத்யா எஸ், ரவி குமார் சிங் மற்றும் பிரசன்னா வெங்கடேஷ் வி ஆகியோர் இயக்குநர்களாகவும், அமித் சம்தாரியா ஜாயிண்ட் டைரக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சீர்திருத்தங்கள் என்ன?
இன்ஃபோசிஸ் நிறுவனர் நந்தன் நிலேகேனி தலைமையிலான உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. முக்கியமாக, வினாத்தாள்களை உறுதிப்படுத்த 4 அடுக்கு சரிபார்ப்பு முறை (Four-tier protocol) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பழைய நிபுணர்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் நீக்கப்பட்டு, புதிய தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
எஜுகேஷன் செக்டாரில் தாக்கம்
இந்த 'மெகா-எக்ஸாம்' மாடலில் உள்ள பலவீனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் எட்-டெக் நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக இருந்து வருகிறது. தேர்வு நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, கணினி வழித் தேர்வுகள் (CBT) மற்றும் CISF பாதுகாப்புடன் கூடிய தேர்வு மையங்கள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில், நிலேகேனி குழுவின் பரிந்துரைகள் எந்த அளவுக்குத் தேர்வுகளின் நம்பகத்தன்மையை மாற்றப் போகிறது என்பதைத்தான் முதலீட்டாளர்களும் கல்வி ஆர்வலர்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
