ஏன் இந்த முதலீட்டுக் கட்டுப்பாடு?
டாடா அசெட் மேனேஜ்மெண்ட் (Tata AMC) நிறுவனம், தங்கத்தில் முதலீடு செய்யும் ETF மற்றும் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் திட்டங்களில் புதிய யூனிட்கள் வாங்குவதற்கு தற்காலிகமாக கட்டுப்பாடு விதித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், தற்போது வரலாறு காணாத அளவுக்கு தங்கத்தில் முதலீடுகள் குவிகிறது. இதனால், சந்தையில் தங்கத்தின் தேவை அதிகமாகி, அதன் விலைக்கும், ETF-ன் NAV-க்கும் இடையே உள்ள வித்தியாசம் (Tracking Error) அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நிர்வாக சிக்கல்கள்
கோல்டு ETF திட்டங்கள், உண்மையான தங்கக் கட்டிகளை அடிப்படையாகக் கொண்டவை. இதனால், அதிகப்படியான முதலீடுகள் வரும்போது, அதற்கு ஏற்ப நிஜ தங்கத்தை கையிருப்பில் வைப்பது நிர்வாக ரீதியாக சவாலாகிறது. இந்த சிக்கலை சமாளிக்க, டாடா AMC வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ₹25 கோடி வரையிலும், ஃபண்ட் ஆஃப் ஃபண்டில் ஒரு தனிநபர் PAN கார்டுக்கு ₹10 லட்சம் வரையிலும் முதலீட்டு வரம்பை நிர்ணயித்துள்ளது.
இண்டஸ்ட்ரி முழுவதும் இதே நிலை?
டாடா AMC மட்டும் அல்ல, ICICI Prudential, Nippon India, HDFC Mutual Fund போன்ற பல முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் இதே போன்ற முதலீட்டுக் கட்டுப்பாடுகளை ஏற்கனவே அமல்படுத்தியுள்ளன. பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நோக்கி படையெடுப்பதே இதற்குக் காரணம்.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
தங்கம் ETF-ல் முதலீடு செய்ய நினைப்பவர்கள், இந்த கட்டுப்பாடுகள் குறித்து அறிந்திருக்க வேண்டும். தங்கத்தின் தேவை குறையாமல், ஃபண்ட் நிறுவனங்கள் தங்கள் கையிருப்புகளை அதிகரிக்காத வரை இந்த கட்டுப்பாடுகள் தொடர வாய்ப்புள்ளது. SIP முதலீட்டாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும், புதிய முதலீட்டாளர்கள் secondary market-ல் அதிக பிரீமியத்தில் வாங்க வேண்டியிருக்கும்.
