2025-ல் இந்திய பங்குச் சந்தை பெரிய அளவில் ஏற்றம் இறக்கம் இல்லாமல், ஒரே நிலையில் (flat market) வர்த்தகமானது. நிஃப்டி 50, பி.எஸ்.இ சென்செக்ஸ் போன்ற முக்கிய குறியீடுகளில் பெரிய முன்னேற்றம் இல்லை. இந்த நிலையிலும், Balanced Advantage Funds (BAFs) முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தை அளித்துள்ளன. சராசரியாக 5% முதல் 8% வரை லாபம் ஈட்டியுள்ளன.
இதற்கு முக்கிய காரணம், இந்த ஃபண்டுகள் பயன்படுத்தும் 'dynamic asset allocation' உத்திதான். அதாவது, சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, கம்ப்யூட்டர் மாடல்களின் (Quant Models) உதவியுடன், பங்குகள் (Stocks) மற்றும் கடன் பத்திரங்கள் (Bonds) இடையே தங்கள் முதலீட்டு அளவை மாற்றி அமைத்துக் கொள்வது.
சந்தை அதிகமாக மதிப்பிடப்பட்டதாக (overvalued) தோன்றும்போது பங்கு முதலீட்டை குறைத்தும், சந்தை சரியும்போது முதலீட்டை அதிகரித்தும், இவை சந்தையின் ஏற்ற இறக்கங்களில் இருந்து ஓரளவு பாதுகாத்துள்ளன. இதனால், agresive hybrid funds போன்ற பிற ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது BAF-கள் குறைவான ஏற்ற இறக்கத்துடன் (less volatile) செயல்பட்டன.
BAF-கள் முதலீட்டாளர்களுக்கு ஸ்திரமான (stable) ஒரு தேர்வாகத் தெரிகின்றன. கடந்த காலங்களில், மார்ச் 2020 போன்ற பெரிய வீழ்ச்சிகளின் போதும், இவை பங்குச் சந்தை குறியீடுகளை விட குறைவான இழப்பையே சந்தித்தன. இதற்குக் காரணம், இவற்றில் உள்ள கடன் பத்திர முதலீடுகள்தான்.
ஆனால், இந்த ஃபண்டுகளின் ஃபீஸ் (Fees) சற்று அதிகமாக இருக்கலாம். பல BAF-களில் இந்த ஃபீஸ் 0.50% முதல் 2.00% வரை இருக்கும். இது, ஆக்டிவ் மேனேஜ்மென்ட் (active management) மற்றும் தொடர்ச்சியான வர்த்தகத்தின் (frequent trading) காரணமாக, நிகர வருமானத்தை (net returns) குறைக்கும்.
மேலும், பங்குச் சந்தை மிக வேகமாக உயரும் காலங்களில், BAF-கள் agresive hybrid funds அளவுக்கு அதிக லாபம் தர முடியாமல் போகலாம். இது ஒருவகையான 'trade-off' - குறைவான ரிஸ்க், ஆனால் குறையக்கூடிய லாபம்.
பலர், BAF-கள் சந்தை வீழ்ச்சியின் போது ஒருபோதும் நஷ்டத்தை சந்திக்காது என்று தவறாக நினைக்கிறார்கள். ஆனால், இவற்றின் 'பாதுகாப்பு' பல விஷயங்களைச் சார்ந்துள்ளது. இந்த dynamic strategy-யின் வெற்றி, கம்ப்யூட்டர் மாடல்கள் எவ்வளவு துல்லியமாக இருக்கின்றன, மற்றும் சந்தைப் போக்குகளை நிதி மேலாளர்கள் (Fund Managers) எவ்வளவு சிறப்பாகப் புரிந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது.
மாடல்கள் தவறான தரவுகளைப் பயன்படுத்தினாலோ அல்லது நிலையான விதிகளையே சார்ந்து இருந்தாலோ, செயல்பாடு பாதிக்கப்படலாம். மேலும், ஃபண்டின் கடன் பத்திரப் பகுதி (bond portion) வட்டி விகிதங்கள் (interest rates) உயரும்போது பாதிக்கப்படலாம். இது, முதலீட்டாளர்கள் எதிர்பாராத வகையில் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, திறமையான மேலாண்மை மற்றும் வலுவான மாடல்கள் மீதான இந்த சார்பு, ஒரு முக்கியமான 'managerial wildcard' ரிஸ்க் காரணியை உருவாக்குகிறது. இதுதான் BAF-களை மற்ற குறியீட்டு ஃபண்டுகளில் (index funds) இருந்து வேறுபடுத்துகிறது. ஆனால், பல முதலீட்டாளர்கள் இதை கவனிக்காமல், flexible allocation-ஐ நிரந்தர பாதுகாப்பாக தவறாகப் புரிந்துகொள்கின்றனர்.
2026-ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, Balanced Advantage Funds மீது பொதுவாக நேர்மறையான பார்வை உள்ளது. தொடர்ந்து சந்தையில் நிச்சயமற்ற தன்மை இருப்பதால், முதலீட்டாளர்கள் இவற்றில் பணத்தை முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 முழுவதும் BAF-களின் Assets Under Management (AUM) கணிசமாக வளர்ந்துள்ளது. மாதந்தோறும் ₹1,000 கோடிக்கு மேல் முதலீடுகள் வந்துள்ளன.
எனினும், இந்த நேர்மறையான பார்வைக்கு மத்தியிலும், நிதி மேலாளர்களின் முக்கியப் பங்கு குறித்த எச்சரிக்கைகள் உள்ளன. நீண்ட கால வெற்றிக்கு, வெறும் சொத்துக்களை மாற்றுவது மட்டுமல்லாமல், மேலாளர்கள் தங்கள் கம்ப்யூட்டர் உத்திகளை மேம்படுத்துவதிலும், மாறிவரும் பொருளாதாரச் சூழல்களுக்கு ஏற்ப செயல்படுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
