நீதிமன்றத்தின் முக்கிய விளக்கம்:
இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கியது. கம்பெனியின் தினசரி செயல்பாடுகளுக்கு பொறுப்பாக இருப்பவர்கள் மட்டுமே, நிதிப் பிழைகள் அல்லது செக் பவுன்ஸ் போன்ற பிரச்சனைகளுக்குப் பொறுப்பாவார்கள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. போர்டு ரெசல்யூஷன்களில் கையெழுத்திடுவது என்பது, சொத்துக்களை வாங்குவது அல்லது ஊழியர்களை நியமிப்பது போன்ற வழக்கமான வணிக முடிவுகளை ஆவணப்படுத்துவது மட்டுமே. இது ஒரு டைரக்டர் கம்பெனியின் அன்றாட பணிகளுக்கு பொறுப்பு என்பதைக் குறிக்காது.
சட்டத்தின் பார்வை:
நெகோஷியபிள் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் ஆக்ட் (Negotiable Instruments Act) பிரிவின் 141-ன் படி, குற்றம் சாட்டப்பட்டவர் கம்பெனியின் வணிகப் பொறுப்புகளுக்கு 'பொறுப்பாகவும், கட்டுப்பாட்டில் இருப்பவராகவும்' இருக்க வேண்டும் என்பதற்கு நேரடி சான்றுகள் இருக்க வேண்டும். புகாரில் அத்தகைய நேரடி குற்றச்சாட்டுகள் இல்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
என்ன நடந்தது?
Protech Engineering Private Limited நிறுவனத்தின் டைரக்டரான சரோஜ் பாண்டே என்பவர் மீது, ₹50 லட்சம் மதிப்பிலான மூன்று செக்குகள் கையெழுத்து பொருந்தாதது மற்றும் மாற்றங்கள் காரணமாக ஏப்ரல் 20, 2021 அன்று செல்லாததாகிவிட்டன. இதைத் தொடர்ந்து அவர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
முதலில் கூடுதல் அமர்வு நீதிமன்றமும், அதைத் தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றமும் இந்த நடவடிக்கைகளை ரத்து செய்ய மறுத்துவிட்டன. ஆனால், உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தின் முடிவை தவறு என்று கூறி, இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக சரோஜ் பாண்டே தாக்கல் செய்திருந்த மனுவை ஏற்றுக்கொண்டது. மேலும், அவர் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்டது.