நீதித்துறையின் தேக்கம் - பொருளாதாரத்திற்கு பெரும் சுமை
இந்தியாவின் சிவில் நீதித்துறையில், கோர்ட்டுகள் பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றுவதில் ஏற்படும் காலதாமதம் என்பது வெறும் சட்ட சிக்கல் மட்டுமல்ல. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக மாறி வருகிறது. நாடு முழுவதும் சுமார் 8.82 லட்சம்execution petitions நிலுவையில் உள்ளன. இதனால், பலரின் சட்டரீதியான வெற்றிகள் வெறும் காகிதங்களாகவே மாறிவிடுகின்றன.
இந்த மெத்தனப் போக்கினால், ஆண்டுதோறும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1-2% வரை இழப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், சொத்துக்கள், நிலங்கள் மற்றும் முதலீடுகள் முடங்கிக் கிடக்கின்றன. இது பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் வீணாக வழிவகுக்கிறது.
ஒப்பந்தப் பாதுகாப்பின்மை - முதலீட்டாளர்கள் தயக்கம்
வணிக உலகிற்கு அத்தியாவசியமான ஒன்று - ஒப்பந்தங்களை முறையாக அமல்படுத்துவது. ஆனால், இந்தியாவில் கோர்ட் உத்தரவுகளை நிறைவேற்றுவதில் ஏற்படும் தாமதம், இந்த அடிப்படையையே கேள்விக்குள்ளாக்குகிறது. உலக வங்கியின் 'Ease of Doing Business' அறிக்கையில், ஒப்பந்த அமலாக்கத்தில் இந்தியா 190 நாடுகளில் 163வது இடத்தில் இருந்தது. ஒரு வணிக வழக்கை முடிவுக்குக் கொண்டுவர சராசரியாக 4 ஆண்டுகள் ஆகிறது.
சிங்கப்பூர் போன்ற நாடுகள் இதை விட மிகக் குறைந்த காலத்தில் முடிக்கும் நிலையில், இது வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் குறைக்கிறது. குறிப்பாக, 2015-ல் கொண்டுவரப்பட்ட Commercial Courts Act, வழக்குகளை விசாரிக்கும் வேகத்தை அதிகரித்தாலும், முக்கியமாக execution proceedings-க்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதனால், விரைவாக வரும் தீர்ப்புகளும் அதே பழைய, தாமதமானexecution முறைகளையே சந்திக்கின்றன. இது வணிகர்களுக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் பெரும் நிச்சயமற்ற நிலையை உருவாக்குகிறது.
அமைப்பு ரீதியான கோளாறுகள் மற்றும் சீர்திருத்தங்கள் இல்லாமை
உத்தரவுகளை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள அதிகாரிகள், போதிய வளங்கள் இல்லாமலும், சில நேரங்களில் எதிர்ப்புகளையும், ஊழலையும் சந்திப்பதால் சவால்களை எதிர்கொள்கின்றனர். மேலும், சட்டத்தில் உள்ள ஓட்டைகள் மற்றும் தவறான நடைமுறைகளால்execution தாமதமாகிறது. Judgment Debtors, புதிய வழக்கு போல் objections எழுப்பி, நடவடிக்கைகளை நீட்டிக்கின்றனர்.
உச்ச நீதிமன்றம் பலமுறை இதை விரைவுபடுத்த உத்தரவிட்டாலும், முறையான சட்ட மற்றும் கட்டமைப்பு ஆதரவு இல்லாததால், நடவடிக்கைகள் முழு வெற்றி அடையவில்லை. இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகள், தனியார் துறையை ஊக்குவிப்பதன் மூலமோ அல்லது வலுவான அரசு இயந்திரம் மூலமோ execution-ஐ திறம்பட நிர்வகிக்கின்றன. அந்த மாதிரியான முறைகளை இந்தியா இன்னும் முழுமையாக பின்பற்றவில்லை.
எதிர்காலப் பார்வை: வளர்ச்சியின் மீதான தடை
சிவில் நீதித்துறையின்execution கட்டத்தை சீரமைக்கத் தவறுவது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு தொடர்ச்சியான சவாலாகவே உள்ளது. ஒப்பந்த அமலாக்கம், வழக்கு விசாரணையை போல வேகமாகவும், உறுதியாகவும் மாறும் வரை, இந்தியாவின் முதலீட்டு கவர்ச்சி குறையும். தாமதமாகும் நீதி, வளர்ச்சியையும் தாமதப்படுத்தும். இந்தச் சிக்கலுக்கு உடனடியாக சட்ட மற்றும் நிர்வாக ரீதியான தீர்வுகள் காணப்பட வேண்டும்.