லைஃப் சப்போர்ட் நிறுத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி!
இந்திய உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, இந்தியாவில் 'end-of-life care' குறித்த சட்ட விவாதங்களில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். 2018-ல் வழங்கப்பட்ட 'Common Cause' தீர்ப்பின் கொள்கைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பின் Article 21-ன் கீழ் வரும் அடிப்படை உரிமையான 'வாழும் உரிமை'யின் ஒரு பகுதியாக 'மாண்புடன் இறக்கும் உரிமையையும்' உறுதி செய்தது.
ராணா, எந்த முன்னேற்றமும் இன்றி நிரந்தர கோமா நிலையில் இருப்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. நீண்ட நாள் சிகிச்சைக்கு பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால், நோயாளியின் நீண்ட நாள் துன்பத்தை தவிர்ப்பது மற்றும் வாழ்க்கையின் மதிப்பை சமநிலைப்படுத்துவது என நீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும், இது போன்றcritical cases-ல் முடிவெடுப்பதற்காக மருத்துவக் குழுக்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
பேசிய்வ் யூத்தனேஷியாவுக்கு வழிவகுத்த முக்கிய தீர்ப்புகள்
இந்தியாவில் பேசிய்வ் யூத்தனேஷியா (passive euthanasia - சிகிச்சையை நிறுத்துவது) சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறுவது என்பது ஒரு நீண்ட சட்டப் பயணமாகும். 1996-ல் வெளியான 'Gian Kaur' வழக்கு, வாழும் உரிமைக்கும் இறக்கும் உரிமைக்கும் இடையிலான விவாதத்தை எழுப்பியது. 2011-ல் 'Aruna Shanbaug' வழக்கு, கோமா நிலையில் உள்ள நோயாளிகளுக்கு, நீதிமன்ற மேற்பார்வையுடன் பேசிய்வ் யூத்தனேஷியா அனுமதிக்கப்படலாம் என்று தெளிவுபடுத்தியது.
பின்னர், 2018-ல் ஒரு பெரிய அமர்வு வழங்கிய 'Common Cause' தீர்ப்பு, பேசிய்வ் யூத்தனேஷியாவை சட்டப்பூர்வமாக்கியதுடன், 'living wills' எனப்படும் விருப்ப மரண சாசனங்களையும் அங்கீகரித்தது. மாண்புடன் வாழும் உரிமையில், மாண்புடன் இறக்கும் உரிமையும் அடங்கும் என்று கூறியது. இதற்காக மருத்துவக் குழுக்கள் மற்றும் நீதிமன்ற மேற்பார்வையுடன் கூடிய ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது, அதன் நடைமுறைகள் இப்போது எளிதாக்கப்பட்டுள்ளன.
ஹரிஷ் ராணா வழக்கு, இந்த மேம்படுத்தப்பட்ட விதிகளை நேரடியாகப் பயன்படுத்துகிறது. செயற்கை ஊட்டச்சத்து (artificial feeding) என்பது ஒரு மருத்துவ சிகிச்சை என்றும், மருத்துவக் குழு ஒப்புக்கொண்டால் அதை நிறுத்தலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
நெறிமுறை மற்றும் நடைமுறை சவால்கள்
சட்டப்பூர்வ முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் பேசிய்வ் யூத்தனேஷியா தொடர்பாக நெறிமுறை (ethical) மற்றும் நடைமுறை சவால்கள் இன்னும் உள்ளன. சிலர், வாழ்க்கையை கடவுளின் பரிசு என்றும், சிகிச்சையை நிறுத்துவது அதற்கு எதிரானது என்றும் வாதிடுகின்றனர். பணப் பிரச்சனைகள் அல்லது சொத்துப் பிரச்சனைகள் காரணமாக பாதிக்கப்படக்கூடியவர்கள் மீது அழுத்தம் கொடுக்கப்படலாம் என்ற அச்சமும் உள்ளது.
பேசிய்வ் யூத்தனேஷியாவுக்கும், ஆக்டிவ் யூத்தனேஷியாவுக்கும் (active euthanasia - நேரடியாக மரணத்தை ஏற்படுத்துவது, இது சட்டவிரோதம்) உள்ள வேறுபாடு முக்கியமானது, ஆனால் நடைமுறையில் குழப்பமானதாக இருக்கலாம். மேலும், மருத்துவக் குழுக்களின் செயல்திறன் மற்றும் நியாயத்தன்மை குறித்தும் கேள்விகள் எழுகின்றன.
இந்தியாவில் பல்லியேட்டிவ் கேர் (palliative care - நோயின் தாக்கத்தை குறைக்கும் சிகிச்சை) சேவைகள் பரவலாக இல்லாதது, வாழ்க்கை முடிவடையும் தருவாயில் உள்ள முடிவுகளை சிக்கலாக்குகிறது.
அடுத்தகட்டம்: சட்டம் மற்றும் பல்லியேட்டிவ் கேர்
இந்திய நீதிமன்றங்கள் தொடர்ந்து 'end-of-life' விஷயங்களில் ஈடுபட்டு வருவது, அரசியலமைப்பின் விளக்கங்களில் அவை எவ்வாறு பரிணமிக்கின்றன என்பதைக் காட்டுகிறது. 'Common Cause' தீர்ப்பை ஒரு தனிநபருக்கு நேரடியாகப் பயன்படுத்தும் இந்தத் தீர்ப்பு, இது போன்ற பல வழக்குகளுக்கு வழிவகுக்கும்.
எனினும், இந்தியாவில் பேசிய்வ் யூத்தனேஷியா தொடர்பாக நாடாளுமன்றத்தால் குறிப்பிட்ட சட்டங்கள் எதுவும் இல்லை. எனவே, இந்த அமைப்பு நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல்களை நம்பியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு லைஃப் சப்போர்ட்டை நிறுத்துவதற்கான வரைவு விதிகளை உருவாக்கி வருகிறது.
சட்ட நிபுணர்கள், தெளிவான சட்டங்கள், எளிதான நடைமுறைகள், பல்லியேட்டிவ் கேர் சேவைகளுக்கான சிறந்த அணுகல் மற்றும் பொது விழிப்புணர்வு ஆகியவை இந்த செயல்முறையை மேம்படுத்தும் என்று பரிந்துரைக்கின்றனர். இதன் மூலம், இரக்கம் மற்றும் தனிப்பட்ட தேர்வுகளுடன் எச்சரிக்கையையும், கவனமான நெறிமுறைகளையும் சமநிலைப்படுத்தி, தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சட்டப்பூர்வ உரிமையை ஒரு நடைமுறை மற்றும் கண்ணியமான யதார்த்தமாக மாற்றுவதே நோக்கமாகும்.