IBC Immunity: DHFL-க்கு கிடைத்தது நிம்மதி!
Yes Bank பண மோசடி வழக்கில் DHFL நிறுவனம் பல மாதங்களாக சிக்கலில் தத்தளித்து வந்தது. ஆனால், தற்போது மும்பை நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. insolvency resolution process வெற்றிகரமாக முடிந்ததால், insolvency and bankruptcy code (IBC)-ன் பிரிவு 32A-ன் படி, DHFL நிறுவனத்திற்கு immunity வழங்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், நிறுவனம் அதன் முந்தைய குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம், insolvency-ல் உள்ள நிறுவனங்கள் ஒரு புதிய தொடக்கத்தை பெறுவதற்காக கொண்டுவரப்பட்டது.
இந்த வழக்கு, முன்னாள் Yes Bank MD & CEO ரானா கபூருக்கும், DHFL-ன் புரொமோட்டர்களான கபில் மற்றும் தீரஜ் வாத்ராவிற்கும் இடையே நடந்ததாக கூறப்படும் கொடுக்கல் வாங்கல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டது. அமலாக்கத்துறை (ED) அளித்த அறிக்கையின்படி, Yes Bank ஏப்ரல் முதல் ஜூன் 2018 வரை DHFL debentures-ல் சுமார் ₹3,700 கோடி முதலீடு செய்ததாகவும், அதற்கு பதிலாக DHFL, ரானா கபூர் தொடர்பான DOIT Urban Ventures Pvt Ltd என்ற நிறுவனத்திற்கு வெறும் ₹39.66 கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்கு ஈடாக ₹600 கோடி கடன் வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதன் மூலம் சுமார் ₹5,050 கோடி அளவுக்கு சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக ED மதிப்பிட்டது.
தனிநபர்கள் மீதான வழக்கு தொடரும்!
நீதிபதி ஆர்.பி. ரோட், DHFL நிறுவனம் CIRP-ஐ முடித்து immunity பெற்றிருந்தாலும், இந்த மோசடியில் ஈடுபட்ட அதன் முன்னாள் அதிகாரிகள் மற்றும் இயக்குனர்கள் மீதான குற்றவியல் வழக்குகள் தொடரும் என தெளிவுபடுத்தியுள்ளார். அதாவது, கபில் வாத்ரா, தீரஜ் வாத்ரா, ரானா கபூர் மற்றும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிற முக்கிய நபர்கள் மீது விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடரும். DHFL நிறுவனத்தை Piramal Capital and Housing Finance Limited, ஜூன் 7, 2021 அன்று NCLT ஒப்புதலுக்குப் பிறகு கையகப்படுத்தியது. நவம்பர் 3, 2021 முதல் DHFL என்ற பெயர் Piramal Capital and Housing Finance Limited என மாற்றப்பட்டது. ஏப்ரல் 1, 2025 அன்று உச்ச நீதிமன்றமும் NCLT-ன் முடிவை உறுதி செய்தது.