IPO-வில் குவியும் முதலீடு!
Kissht-ன் IPO (Initial Public Offering) இன்று 3வது நாள் முடிவில் கிட்டத்தட்ட 2 மடங்குக்கும் அதிகமாக சந்தா பெறப்பட்டுள்ளது. நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து (Institutional Investors) கிடைக்கும் அமோக வரவேற்பு இதற்கு முக்கிய காரணம்.
குறிப்பாக, Qualified Institutional Buyer (QIB) பிரிவில் மட்டுமே 6 மடங்குக்கு மேல் சந்தா பதிவாகியுள்ளது. இது நிறுவன முதலீட்டாளர்களின் Kissht மீதான நம்பிக்கையை காட்டுகிறது. உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்டுகள் மட்டும் இந்த IPO-வில் முக்கிய பங்கு வகித்து, ₹350 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளன.
இதற்கு முன்பாக, HDFC Mutual Fund, ICICI Prudential Mutual Fund, WhiteOak Capital, Goldman Sachs மற்றும் Citigroup போன்ற முன்னணி முதலீட்டாளர்களிடமிருந்து ₹277.78 கோடி ஆங்கர் ரவுண்ட் (Anchor Round) மூலம் ஏற்கெனவே திரட்டப்பட்டுள்ளது.
நிறுவன முதலீட்டாளர்களின் இந்த அதீத ஆர்வம், சில்லறை முதலீட்டாளர்கள் (Retail Investors) மற்றும் மற்ற முதலீட்டாளர்களிடமிருந்தும் (Non-institutional Investors) தொடர்ந்து ஆதரவு கிடைத்து, ஒட்டுமொத்தமாக 2 மடங்குக்கும் அதிகமான சப்ஸ்கிரிப்ஷனை எட்டியுள்ளது.
மியூச்சுவல் ஃபண்டுகளின் இந்த ஈடுபாடு, நிறுவனத்தின் பிசினஸ் மாடல் மற்றும் எதிர்கால வளர்ச்சி மீதுள்ள நீண்ட கால நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மேலும், இந்த நிறுவனத்தின் டிஜிட்டல் கடன் வழங்கும் தளம் (Digital Lending Platform), அதிகரித்து வரும் வாடிக்கையாளர் தளம் மற்றும் மேம்பட்டு வரும் லாபம் போன்றவையும் இந்த IPO-விற்கு சாதகமாக இருப்பதாக முன்னணி ப்ரோக்கரேஜ் நிறுவனங்கள் கணித்துள்ளன. நிறுவனத்தின் மேலாண்மையின் கீழ் உள்ள சொத்துக்கள் (Assets Under Management) ₹12,679 மில்லியன் என்ற அளவில் இருந்து ₹59,557 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது. மேலும், வாடிக்கையாளர் தளம் 11 மில்லியன்க்கும் அதிகமாக உள்ளது.
இந்த IPO-வின் விலை ₹162 முதல் ₹171 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தா பெறுவதற்கான கடைசி நாள் மே 5, 2026 ஆகும்.
