IRDAI ஒப்புதலுடன் அமோக தொடக்கம்!
இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) இறுதிக் கட்ட ஒப்புதலைப் பெற்ற பிறகு, Allianz Jio Reinsurance Ltd தனது செயல்பாடுகளை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், reinsurance வணிகத்தில் உடனடியாக இறங்க உள்ளது.
'Insurance for All by 2047' - இலக்கை நோக்கிய பயணம்!
இந்தியாவின் 'அனைவருக்கும் இன்சூரன்ஸ் 2047' என்ற லட்சியத்தை அடையும் பயணத்தில், இந்த Joint Venture முக்கிய பங்கு வகிக்கும். JFSL-ன் பரந்த உள்நாட்டு வலையமைப்பு (Network) மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புடன் (Digital Infrastructure), Allianz-ன் உலகளாவிய நிபுணத்துவம் (Global Expertise) மற்றும் reinsurance அனுபவம் இணைந்து செயல்பட உள்ளது.
உள்ளூர் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்குப் புதிய உத்வேகம்!
JFSL MD & CEO ஹிதேஷ் சேத்தியா கூறுகையில், "உள்ளூர் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு, வளர்ந்து வரும் இடர்களை (Risks) திறம்பட நிர்வகிக்க தேவையான திறன் மற்றும் நிபுணத்துவத்தை வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இது ஒட்டுமொத்த இன்சூரன்ஸ் துறையின் வளர்ச்சிக்கு உதவும்" என்று தெரிவித்தார்.
Allianz SE-ன் நிர்வாகக் குழு உறுப்பினர் கிறிஸ் டவுன்சென்ட் கூறுகையில், "இந்தியாவின் தனித்துவமான டிஜிட்டல் மற்றும் நிதிச் சூழலைப் பற்றிய வலுவான புரிதலுடன், உலகளாவிய தொழில்நுட்ப நிபுணத்துவத்தை இணைத்து, புதுமையான இடர் தீர்வுகளை (Risk Solutions) வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்" என்று குறிப்பிட்டார். சோனியா ராவல் தான் Allianz Jio Re-ன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) பொறுப்பேற்கிறார்.