Niti Aayog அமைப்பு, ‘Reimagining Skilling for Viksit Bharat@2047’ என்ற புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, இனி வரும் காலங்களில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை விட, அவர்களுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்புகளின் அடிப்படையிலேயே நிதியுதவி மற்றும் அங்கீகாரம் வழங்கப்படும்.
அரசு அமைப்பான Niti Aayog, 'Reimagining Skilling for Viksit Bharat@2047' என்ற விரிவான வரைபடத்தை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தொழிற்பயிற்சி மற்றும் கல்வி கட்டமைப்பை மாற்றி அமைப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். தொழில்துறைக்குத் தேவையான திறன்களை மாணவர்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்ப்பதே இதன் அடிப்படை.
அவுட்கம் சார்ந்த பயிற்சி (Outcome-Based Training)
இனி வரும் காலங்களில் வெறும் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை வைத்து நிதியுதவி வழங்கப்படாது. மாறாக, பயிற்சி பெற்ற மாணவர்கள் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது மற்றும் அவர்களின் சம்பள உயர்வு என்ன என்பது போன்ற 'அவுட்கம்' அடிப்படையிலேயே இனி நிதி ஒதுக்கீடு இருக்கும். இது, தரம் வாய்ந்த பயிற்சி வழங்கும் நிறுவனங்களுக்கு ஒரு பெரிய சாதகமாக அமையும்.
கல்வி முறையில் அதிரடி மாற்றங்கள்
ஆறாம் வகுப்பு முதலே பொது வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் திறன்களை (GEES) மாணவர்களுக்குக் கற்பிக்கத் திட்டமிட்டுள்ளனர். ஒன்பதாம் வகுப்பிலிருந்தே 'Kaushal Tracks' எனும் பிரத்யேகப் பிரிவு அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் பட்டப்படிப்பு முடிக்கும் முன்பே மாணவர்களை வேலைக்குத் தயார் நிலைக்குக் கொண்டுவர முடியும்.
வேலைவாய்ப்பின்மைக்குத் தீர்வு
தற்போது 15-29 வயதுடைய சுமார் 8.7 கோடி இளைஞர்கள் கல்வி, வேலைவாய்ப்பு என எதிலும் இல்லாமல் (NEET) இருப்பது கவலை அளிக்கும் விஷயம். இவர்களுக்குத் தகுந்த வாய்ப்புகளை உருவாக்கவே இந்த சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
இது ஒரு பாலிசி திட்டம் என்பதால், எஜுகேஷன் மற்றும் எட்-டெக் நிறுவனங்கள் தங்கள் வணிக மாதிரிகளை இந்த புதிய தரங்களுக்கு ஏற்ப மாற்ற வேண்டியிருக்கும். அதே சமயம், வெவ்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில கல்வி வாரியங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு எப்படி இருக்கும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.
