இந்தியப் பொருளாதாரம் ஏன் பாதிக்கப்படும்?
மத்திய கிழக்கில் மோதல் நீடித்தால், இந்தியாவின் GDP வளர்ச்சி கணிப்புகளை விட சுமார் 1% வரை குறையலாம். அதே நேரத்தில், பணவீக்கம் 1.5% அளவுக்கு உயரக்கூடும். இந்தியா தனது கச்சா எண்ணெயில் கிட்டத்தட்ட 90%, அத்துடன் இயற்கை எரிவாயு மற்றும் உரங்கள் போன்ற முக்கிய இறக்குமதிகளுக்கு (Imports) வெளிநாடுகளையே சார்ந்துள்ளது. இதனால், சர்வதேச சந்தையில் ஏற்படும் எந்த அதிர்ச்சியும் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பாதிப்புகள், எண்ணெய் மற்றும் எரிசக்தி சந்தைகளுடன் வலுவான தொடர்புகளைக் கொண்டிருப்பதால், பல்வேறு துறைகளுக்கும் பரவும்.
நேரடியாகப் பாதிக்கப்படும் துறைகள்:
ஜவுளி (Textiles), பெயிண்ட்ஸ், இரசாயனங்கள் (Chemicals), உரங்கள் (Fertilizers), சிமென்ட், டயர்கள் போன்ற அதிக வேலைவாய்ப்பு உள்ள துறைகள் இந்த மோதலால் நேரடியாக பாதிக்கப்படும். இந்தப் பகுதிகளில் வேலைவாய்ப்பு அல்லது வருமானம் குறைந்தால், அது தேவையை (Demand) மேலும் பாதிக்கும். சண்டைகள் நின்றாலும், சீர்குலைந்த விநியோகச் சங்கிலிகளை (Supply Chains) சரிசெய்ய கணிசமான காலம் ஆகலாம்.
அரசு தயார் நிலையில்:
இந்த ஆபத்துக்களை எதிர்கொள்ள, இந்திய அரசு ₹1 லட்சம் கோடி மதிப்பில் பொருளாதார ஸ்திரத்தன்மை நிதியை (Economic Stabilization Fund - ESF) 2026 நிதியாண்டிற்கு (FY26) உருவாக்கியுள்ளது. பொருளாதார தாக்கம் 2027 நிதியாண்டிற்கும் (FY27) தொடர்ந்தால், அரசு பெரிய ஆதரவு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும். இது பெரிய மாநிலங்களுடன் இணைந்து செயல்படுவதையும், நிதியின் வளங்களை அதிகரிக்கவும் வழிவகுக்கும்.