இலக்குகளை அடைவதில் உள்ள தடைகள்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Renewables) மற்றும் மின்பகிர்வு பாதைகளை (transmission lines) வேகமாக அமைப்பதில் தான் உமிழ்வு தீவிரத்தைக் குறைக்கும் பாதை அமைந்துள்ளது. ஆனால், வரலாற்று ரீதியாக, நிலம் கையகப்படுத்துதல், நிதிப் பிரச்சினைகள் மற்றும் ஒழுங்குமுறை தடைகள் (regulatory hurdles) காரணமாக இந்தத் துறைகளில் பெரும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. அதேபோல், காடு வளர்ப்பு (afforestation) மற்றும் நிலம் சார்ந்த திட்டங்களை நம்பியே கார்பன் உமிழ்வைக் குறைக்கும் இலக்கை அடைய முடியும்.
கொள்கை நிலைத்தன்மை கேள்விக்குறியா?
கார்பன் உமிழ்வைக் குறைக்க முக்கியமானதாக கருதப்படும் வன நிலங்கள், வளர்ச்சித் திட்டங்களுக்காக அடிக்கடி திசை திருப்பப்படும்போது கொள்கை நிலைத்தன்மை குறித்து கேள்விகள் எழுகின்றன. உதாரணமாக, கிரேட் நிக்கோபார் தீவுகளில் உள்ள திட்டங்களுக்காக மட்டும் சமீபத்தில் 13,000 ஹெக்டேருக்கும் அதிகமான வன நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட பருவநிலை திட்டமான NDC-யில் (Nationally Determined Contributions), தனிப்பட்ட துறைகள் எவ்வாறு இந்த உமிழ்வு குறைப்பை அடையும் என்பதற்கான விரிவான வரைபடங்கள் (roadmaps) இல்லை. இது கனரக தொழில்கள் மற்றும் போக்குவரத்துத் துறைகளின் உமிழ்வை எவ்வாறு நிர்வகிப்பது என்பதில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துகிறது.
நிலக்கரி மீதான சார்பு மற்றும் நிதிப் பற்றாக்குறை
உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்ய நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தியை விரிவுபடுத்துவது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முன்னேற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அபாயத்தை கொண்டுள்ளது. இந்தியா 2034-35க்குள் 97,000 மெகாவாட் புதிய நிலக்கரி மற்றும் லிக்னைட் அனல் மின் உற்பத்தி திறனைச் சேர்க்க திட்டமிட்டுள்ளது. இதற்கு கணிசமான நிதி தேவைப்படுகிறது. ஆனால், உள்நாட்டு பட்ஜெட் வரம்புகள் மற்றும் கணிக்க முடியாத சர்வதேச பருவநிலை நிதிகள் (international climate funds) செயலாக்கத்தில் சிக்கல்களை சேர்க்கின்றன. வளர்ச்சிக்கும், உமிழ்வு குறைப்புக்கும் (decarbonisation) இடையே சமநிலையை ஏற்படுத்துவதற்கான இந்த உந்துதல், நிறுவனத் திறன்களைக் கடுமையாக சோதிக்கக்கூடும். இந்தியாவின் பருவநிலை இலக்குகள் அதன் நோக்கத்தைக் காட்டினாலும், தெளிவான கண்காணிப்பு (monitoring), அடையக்கூடிய காலக்கெடு (timelines) மற்றும் திட்டங்களை யதார்த்தமாக செயல்படுத்துவதற்கான ஒழுக்கம் ஆகியவற்றைப் பொறுத்தே வெற்றி அமையும். அரசியல் உறுதிப்பாட்டின் நிலைத்தன்மையும் ஒரு கவலையாகவே உள்ளது.