2027 மார்ச் வரை நீடிக்கும் El Nino பாதிப்பால் உணவுப் பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சாதாரண மக்களின் பட்ஜெட் பாதிக்கப்பட்டு, நுகர்வோர் சந்தையில் மந்தநிலை ஏற்படலாம் என மத்திய நிதியமைச்சகம் எச்சரித்துள்ளது.
விவசாயத்தை பாதிக்கும் El Nino
நிதியமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, 2027 மார்ச் வரை நீடிக்க வாய்ப்புள்ள இந்த El Nino காலநிலை மாற்றத்தால் ரபி (Rabi) பருவத்தில் கோதுமை மற்றும் கடுகு போன்ற அத்தியாவசிய பயிர் விளைச்சல் பாதிக்கப்படலாம். இது நேரடியாக உணவுப் பணவீக்கத்தை (Food Inflation) அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
நுகர்வோர் சந்தையில் என்ன நடக்கும்?
உணவுப் பொருட்களின் விலை உயர்ந்தால், நுகர்வோர் தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். இதனால் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் போன்ற பிரிவுகளில் செலவு குறைந்து, அந்த நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி மந்தமடையலாம். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நுகர்வோர் பொருட்கள் துறை 7.2% வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும், வருங்காலத்தில் இது சவாலாக அமையலாம் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
வலுவான பக்கங்கள் என்னென்ன?
climate சவால்கள் ஒருபுறம் இருந்தாலும், உள்நாட்டுத் தொழில் துறை இன்னும் வலுவாகவே உள்ளது. குறிப்பாக மூலதனப் பொருட்கள் (Capital Goods) துறை முதல் காலாண்டில் 14% வளர்ச்சியை எட்டியுள்ளது. மேலும், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மற்றும் சேவைகள் துறை வலுவாக இருப்பது, உலகளாவிய பொருளாதார ஏற்ற இறக்கங்களைத் தாங்க உதவும் ஒரு கவசமாகச் செயல்படுகிறது.
முதலீட்டாளர்கள் தற்போதைய நிலையில் உணவுப் பணவீக்கத் தரவுகளையும், நுகர்வோர் பொருட்கள் சார்ந்த நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளையும் கூர்ந்து கவனிப்பது அவசியம்.
