உச்ச நீதிமன்றம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. பேக் செய்யப்பட்ட உணவுகளில் (Ultra-processed foods) கட்டாய எச்சரிக்கை லேபிள்களை வைக்க மத்திய அரசுக்கு **2 வார கால அவகாசம்** வழங்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளித்து, பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுத் துறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர கடுமை காட்டியுள்ளது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே. வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு, FSSAI மற்றும் மத்திய அரசுக்கு இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது.
FMCG நிறுவனங்களுக்கு என்ன சிக்கல்?
இந்த அறிவிப்பு FMCG நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக மாறலாம். தின்பண்டங்கள், பிஸ்கட்கள் மற்றும் குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், தங்களது பேக்கேஜிங் வடிவமைப்பை முற்றிலுமாக மாற்ற வேண்டியிருக்கும். சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு அதிகமாக உள்ள உணவுப் பொருட்களில் எச்சரிக்கை லேபிள்கள் ஒட்டப்பட்டால், அது அந்த நிறுவனங்களின் விற்பனையை பாதிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, புதிய பேக்கேஜிங் மற்றும் லேபிளிங் மாற்றங்களுக்காக நிறுவனங்கள் கூடுதல் செலவுகளைச் சந்திக்க நேரிடும்.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை
சர்வதேச நாடுகளில் இத்தகைய எச்சரிக்கை லேபிள்கள் அமல்படுத்தப்பட்டபோது, நுகர்வோரின் வாங்கும் பழக்கத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. கடந்த 2009 முதல் 2023 வரை இந்தியாவில் பதப்படுத்தப்பட்ட உணவு சந்தை 150% வளர்ச்சி கண்டுள்ளது. இப்போது இந்த லேபிள்கள் கட்டாயமாக்கப்படும் போது, நிறுவனங்களின் பிராண்ட் மதிப்பிலும், வருவாயிலும் தாக்கம் இருக்கிறதா என்பதை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். குறிப்பாக, நிறுவனங்களின் அடுத்தடுத்த ஏர்னிங்ஸ் கால்களில் மேனேஜ்மென்ட் இது குறித்து என்ன கூறப்போகிறது என்பது மிக முக்கியம்.
