கல்யாண் ஜூவல்லர்ஸ் வழங்கும் 'கோல்ட்4இந்தியா இனிஷியேட்டிவ்'!
கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்தியா லிமிடெட், நாட்டில் வீடுகளில் வீணாக இருக்கும் தங்கத்தை மீட்டெடுக்கவும், இந்தப் பொன்னான உலோகத்தின் பயன்பாட்டை பொறுப்புடன் ஊக்குவிக்கவும் 'நேஷன் ஃபர்ஸ்ட் – கோல்ட்4இந்தியா இனிஷியேட்டிவ்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தேசிய கையிருப்புக்கு ஊக்கம்
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்புக்கு இந்தத் திட்டம் வலு சேர்க்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கத்தை வெறுமனே ஒரு நிரந்தர சொத்தாகப் பார்ப்பதை மாற்றி, அதன் மதிப்பை அதிகரிக்கும் வகையில் செயல்பட இந்த இனிஷியேட்டிவ் உதவும் என நிர்வாக இயக்குநர் டி.எஸ். கல்யாணராமன் தெரிவித்துள்ளார்.
சேமிப்பில் இருந்து வளமாக மாறும் தங்கம்
டி.எஸ். கல்யாணராமன் கூறுகையில், "'நேஷன் ஃபர்ஸ்ட் – கோல்ட்4இந்தியா இனிஷியேட்டிவ்' என்பது வெறும் விளம்பர பிரச்சாரம் அல்ல. இது நுகர்வோரின் பார்வையை மாற்றும் ஒரு முயற்சி. தங்கத்தை எப்போதும் அப்படியே வைத்திருக்கும் சொத்தாகப் பார்க்காமல், தொடர்ந்து பொருளாதார மதிப்பை உருவாக்கும் ஒரு புதுப்பிக்கத்தக்க உள்நாட்டு வளமாக அங்கீகரிக்க இது உதவும்" என்றார்.
திட்டத்தின் நான்கு முக்கிய அம்சங்கள்
இந்த இனிஷியேட்டிவ் நான்கு முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது: பழைய தங்கத்தை மாற்றும் சிறப்புச் சலுகை, தங்கத்தை பணமாக்கும் 'Encash Gold' திட்டம், 'My Kalyan Gold Recirculation Drive' (தங்கத்தை மறுசுழற்சி செய்யும் இயக்கம்), மற்றும் 18 காரட் தங்க நகைகளின் பரவலான பயன்பாட்டை ஊக்குவித்தல். இந்த அணுகுமுறை, வடிவமைப்பையும் உணர்வுபூர்வமான மதிப்பையும் பாதுகாக்கும் அதே வேளையில், நிலையான நுகர்வை ஊக்குவிக்கும் என கல்யாண் ஜூவல்லர்ஸ் நம்புகிறது.
18 காரட் தங்கம் ஏன் முக்கியம்?
22 காரட் தங்கத்தை விட 18 காரட் தங்க நகைகளில் தூய தங்கம் குறைவாக பயன்படுத்தப்படுகிறது. இதனால், மிகவும் நேர்த்தியான வடிவமைப்புகளை உருவாக்க முடியும். இது தங்கத்தின் மொத்த பயன்பாட்டு அளவை மேம்படுத்தவும், நிலையான பயன்பாட்டிற்கும் உதவுகிறது.
பரந்த சமூகப் பங்கேற்பு அவசியம்
டி.எஸ். கல்யாணராமன், பரவலான மக்களின் பங்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். "தங்கத்தின் மறுசுழற்சி என்பது கொள்கை விவாதங்கள் அல்லது நகர்ப்புற நுகர்வு முறைகளோடு நின்றுவிடக் கூடாது. இதன் நீண்டகால வெற்றி, இந்தியாவின் தங்க உரிமையின் பெரும்பகுதி இருக்கும் வீடுகள் மற்றும் சமூகங்களின் பங்கேற்பை சார்ந்துள்ளது. பொறுப்பான நுகர்வும் கலாச்சாரத் தொடர்ச்சியும் இணைந்து செல்ல முடியும், செல்ல வேண்டும்" என்று அவர் கூறினார். பொருளாதார இலக்குகளையும் கலாச்சாரப் பாரம்பரியங்களையும் சமநிலையில் கொண்டு செல்ல நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.