2026-27 பட்ஜெட்டில் சந்தன மர சாகுபடி விதிகளை எளிதாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா இறக்குமதி நாடாக இருந்து, சந்தன எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக மாற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் அறிவிப்பின் நோக்கம்
2026-27 பட்ஜெட் சந்தன மர தொழிலுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் மிக முக்கியமான கொள்கை மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. கடந்த காலங்களில் இருந்த கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தி, தனியார் துறையும் இதில் ஈடுபட அரசு வழிவகுத்துள்ளது. குறிப்பாக, 1996 முதல் 2024 வரை இந்தியா 500 டன்னுக்கும் அதிகமான சந்தன எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. இந்தச் சூழலை மாற்றி, இந்தியாவை உலக சந்தையில் ஒரு முக்கிய ஏற்றுமதியாளராக மாற்ற அரசு துடிக்கிறது.
விவசாயிகளுக்கு என்ன வாய்ப்பு?
கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகள், மா மற்றும் பயறு வகை பயிர்களுடன் சேர்த்து சந்தன மரங்களை (Agroforestry) வளர்க்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். இது காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளரும் பயிராகப் பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!
சந்தன மரம் (Santalum album) வளர்ப்பது எளிதான காரியம் அல்ல. இது ஒரு 'ஹெமி-ரூட் பாராசிடிக்' (Hemi-root parasitic) வகை தாவரம் என்பதால், உயிர்வாழ இதற்கு குறிப்பிட்ட வகை 'ஹோஸ்ட்' மரங்கள் அவசியம்.
- முக்கிய எச்சரிக்கை: சரியான முறையில் பராமரிக்கவில்லை என்றால், மரங்களின் இறப்பு விகிதம் அதிகரித்து நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
- முதலீட்டுத் தன்மை: இது ஒரு குறுகிய கால முதலீடு அல்ல. அறுவடைக்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டும் என்பதால், பணப்புழக்கம் (Liquidity) இதில் குறைவாகவே இருக்கும்.
இந்தத் திட்டத்தின் வெற்றி, அரசின் புதிய விதிமுறைகள் தரைமட்டத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்தே அமையும். சந்தன சாகுபடிக்கான நாற்றங்கால்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை விவசாயிகள் முறையாகப் பயன்படுத்தினால் மட்டுமே நீண்ட கால அடிப்படையில் லாபம் ஈட்ட முடியும்.
