அதிகாரப்பூர்வ கோரிக்கை!
அமெரிக்காவிடம் இந்தியா இந்த கோரிக்கையை அதிகாரப்பூர்வமாக முன்வைத்துள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதல்கள் தீவிரமடைந்து, உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், எரிபொருள் விநியோகப் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.
இந்திய சுத்திகரிப்பு ஆலைகளின் அதிரடி!
இந்த சிறப்பு அனுமதி மே 16 ஆம் தேதி காலாவதியாக உள்ள நிலையில், இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் (Refiners) ரஷ்ய கச்சா எண்ணெயின் இறக்குமதியை கணிசமாக அதிகரித்துள்ளன. commodity tracking firm Kpler-ன் தரவுகளின்படி, மே மாதத்தில் இந்திய இறக்குமதிகள் இதுவரை ஒரு நாளைக்கு சராசரியாக 20 லட்சம் பேரல்களுக்கு மேல் என்ற சாதனையை எட்டியுள்ளது.
அமெரிக்காவின் முந்தைய நிலைப்பாடு vs இந்தியாவின் முன்னுரிமை
உக்ரைன் போர் காரணமாக ரஷ்ய எண்ணெய் மீதான அழுத்தத்தின் ஒரு பகுதியாக, ரஷ்யாவை சார்ந்திருப்பதை படிப்படியாக குறைக்க வேண்டும் என அமெரிக்கா முன்னர் வலியுறுத்திய போதிலும், இந்த அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது. மேற்கு ஆசியாவில் மோதல் குறைய எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், தடையற்ற எரிசக்தி விநியோகத்தை பராமரிப்பது அவசியம் என்று இந்தியா அமெரிக்க தரப்பிற்கு தெரிவித்துள்ளது.
இறக்குமதி விவரங்கள் ஒரு பார்வை
ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா முழுமையாக தடை விதிக்கவில்லை என்றாலும், இந்த சிறப்பு அனுமதி இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கும், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் மிக முக்கியமானது. மார்ச் மாதத்தில், இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி ஒரு நாளைக்கு சுமார் 22.5 லட்சம் பேரல்களாக இருந்தது. இது பிப்ரவரி மாதத்தை விட கிட்டத்தட்ட இரு மடங்காகும். மேலும், அந்த மாதத்தின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் இது சுமார் பாதி ஆகும்.
இந்தியாவின் முக்கியத்துவம்
2022 முதல், ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கும் முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ்கிறது. சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய வாங்குபவராக இந்தியா உள்ளது. ரஷ்யாவின் Urals grade எண்ணெயை வாங்கும் மிகப்பெரிய வாங்குபவராகவும் இந்தியா விளங்குகிறது.
