NBFC-க்களுக்கு RBI வழங்கும் புதிய சாளரம்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தற்போது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) 'டெர்ம் மணி மார்க்கெட்'-ஐ பயன்படுத்த அனுமதித்துள்ளது. இந்த முக்கிய மாற்றத்தின் நோக்கம், சந்தையில் பணப்புழக்கத்தை (Liquidity) அதிகரிப்பது மற்றும் பொருளாதாரத்தில் பணவியல் கொள்கையின் தாக்கத்தை மேம்படுத்துவதாகும். இது மட்டுமின்றி, விலை கண்டறிதலையும் (Price Discovery) மேம்படுத்தி, குறுகிய கால மற்றும் நீண்ட கால வட்டி விகிதங்களுக்கு இடையே தெளிவான தொடர்பை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி திரட்ட புதிய வழிகள்
இந்த அனுமதி, NBFC-க்களுக்கு நிதி திரட்ட புதிய மற்றும் மாறுபட்ட வழிகளைத் திறக்கும் என துறை சார்ந்தவர்கள் கருதுகின்றனர். இதுவரை, பெரும்பாலும் நிலையற்ற 'ஓவர்நைட் மார்க்கெட்'-ஐ சார்ந்திருந்த நிலை மாறி, இது ஒரு சீரான நிதி நிர்வாகத்திற்கு உதவும். இருப்பினும், இந்த சந்தை பாதுகாப்பற்றது (Unsecured) என்ற கவலைகளும் உள்ளன. இதனால், சாத்தியமான அபாயங்களைக் கட்டுப்படுத்த கடுமையான வரம்புகளும், வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளும் தேவைப்படும்.
Borrowing செலவில் மாற்றம் சாத்தியமா?
வரவேற்கத்தக்க இந்த அறிவிப்பு இருந்தாலும், டெர்ம் மணி மார்க்கெட்டில் NBFC-க்களின் கடன் வாங்கும் செலவு (Borrowing Cost) பெரும்பாலும் கமர்ஷியல் பேப்பர் (Commercial Paper) போன்ற குறுகிய கால கருவிகளின் விகிதங்களைப் போலவே இருக்கும் என NBFC-க்கள் நம்புகின்றனர். சந்தையின் செயல்பாடு 90 நாட்கள் வரையிலான காலங்களுக்கு மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, பெஞ்ச்மார்க் டெர்ம் மணி விகிதங்கள் சுமார் 6.5 சதவீதம் என்ற அளவில் உள்ளன. இருப்பினும், NBFC-க்களின் கடன் வாங்கும் செலவு, வங்கிகள் மற்றும் முதன்மை டீலர்களுடன் (Primary Dealers) ஒப்பிடும்போது, அவர்களின் கிரெடிட் குவாலிட்டி (Credit Quality) வேறுபாடுகள் காரணமாக, கமர்ஷியல் பேப்பர் விகிதங்களிலிருந்து பெரிய அளவில் மாறாமல் இருக்கலாம். எனவே, சந்தையில் நுழைவதால் மட்டும் மலிவான நிதி உத்தரவாதம் இல்லை.
பணச் சந்தை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்
இதுவரை, வங்கிகள் மற்றும் தனித்த முதன்மை டீலர்கள் மட்டுமே டெர்ம் மணி மார்க்கெட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். புதிய பங்கேற்பாளர்களால், சந்தை செயல்பாடு அதிகரிக்கும் மற்றும் அதன் வர்த்தக அளவு (Volumes) வளரும். இது வலுவான நிதி அமைப்பை உருவாக்க உதவும். RBI-யின் இந்த நடவடிக்கை, இந்தியாவின் பணச் சந்தைகளை மேலும் ஒருங்கிணைத்து, திறம்பட செயல்பட வைப்பதற்கான ஒரு படியாகும்.