RBI-யின் அதிரடி அனுமதி!
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ICICI வங்கி குழுமத்தின் கீழ் உள்ள ICICI Prudential Asset Management Company லிமிடெட் போன்ற நிறுவனங்கள், நாட்டின் 8 முன்னணி வங்கிகளில் பங்குகளை வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புதல் மூலம், ICICI வங்கி குழுமம் குறிப்பிட்ட வங்கிகளின் கடன் சந்தையில் தனது இருப்பை வலுப்படுத்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த வங்கிகளுக்கு அனுமதி?
RBI-யின் இந்த ஒப்புதல் கீழ்வரும் 8 வங்கிகளுக்கு பொருந்தும்:
- Bandhan Bank Limited
- City Union Bank Limited
- Equitas Small Finance Bank Limited
- Federal Bank Limited
- IDFC First Bank Limited
- HDFC Bank Limited
- The Karur Vysya Bank Limited
- RBL Bank Limited
ஒவ்வொரு வங்கியிலும், ICICI குழுமம் 9.95% பங்கு மூலதனத்தை அல்லது வாக்களிக்கும் உரிமைகளை வாங்கலாம். இந்த அனுமதி, RBI-யின் 'Commercial Banks - Acquisition and Holding of Shares or Voting Rights) Directions, 2025'-ன் படி வழங்கப்பட்டுள்ளது. இது ICICI வங்கி குழுமத்தின் வங்கித் துறையில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் ஒரு முக்கிய மூலோபாய நகர்வாக கருதப்படுகிறது.
முக்கிய சவால் என்ன?
இந்த அனுமதியில் ஒரு முக்கிய நிபந்தனை உள்ளது. RBI வழங்கிய இந்த அனுமதியை ICICI வங்கி குழுமம், கடிதம் கிடைத்த நாளிலிருந்து 1 வருடத்திற்குள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், இந்த ஒப்புதல் ரத்து செய்யப்படும். எனவே, அடுத்த 1 வருடத்திற்குள் ICICI வங்கி குழுமம் இந்தப் பங்குகளை வாங்குமா, வாங்கினால் அதற்கான நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள்.