Motilal Oswal என்ன சொல்கிறது?
சந்தைப் பகுப்பாய்வாளர்களான Motilal Oswal, ஹீரோ மோட்டோகார்ப் பங்குகள் மீது தொடர்ந்து 'BUY' என்ற பரிந்துரையை வலியுறுத்தியுள்ளது. இதன் இலக்கு விலையாக ₹6,205 என நிர்ணயித்துள்ளனர். நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக இவர்கள் கருதுகின்றனர்.
வளர்ச்சிக்கு என்ன காரணம்?
தற்போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஸ்ப்ளெண்டர் (Splendor) மாடலின் விற்பனை சிறப்பாக உள்ளது. மேலும், 125cc பைக் பிரிவில் புதிய மாடல்களான Glamour மற்றும் Xtreme125R அறிமுகமானதால் அந்தப் பிரிவும் புத்துயிர் பெற்றுள்ளது. வழக்கமான ஸ்கூட்டர்கள் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையும் நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஏற்றுமதியும் அதிகரித்திருப்பது ஒரு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் மட்டும் இந்த ஷேர் சுமார் 43% உயர்ந்து, தற்போது ₹5,247.00 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது.
சந்தைப் போட்டி மற்றும் எதிர்கால கணிப்புகள்
உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன சந்தையான இந்தியாவில், 2030ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு 6% முதல் 8% வளர்ச்சி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப், FY25 முதல் FY28 வரை ஆண்டுக்கு 7% வாகன விற்பனை வளர்ச்சி (Volume CAGR) அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், FY25-28 காலகட்டத்தில் வருவாய் (Revenue), EBITDA மற்றும் நிகர லாபம் (PAT) ஆகியவற்றில் ஆண்டுக்கு 11% வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய இரு சக்கர வாகன சந்தையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தற்போதைய விலை-வருவாய் விகிதம் (P/E ratio) சுமார் 20-22 ஆக உள்ளது. இது Bajaj Auto (28-31) மற்றும் TVS Motor Company (57-84) போன்ற போட்டியாளர்களை விடக் குறைவாகும்.
செலவு அழுத்தம் ஒரு சவால்
FY25-ல் நிறுவனம் ₹9,939 கோடி வருவாய் மற்றும் ₹1,081 கோடி நிகர லாபத்தை பதிவு செய்தது. இருப்பினும், மூலப்பொருட்கள் விலை உயர்வதால், குறுகிய காலத்தில் லாப வரம்பில் (Margin) சிறிது அழுத்தம் இருக்கலாம் என analystகள் எச்சரிக்கின்றனர். கிராமப்புற பொருளாதாரம் மீட்சி பெறுவது, ஸ்கூட்டர் மற்றும் ஏற்றுமதி விற்பனை அதிகரிப்பது போன்றவை நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.