Raymond நிறுவனத்தின் ஏரோஸ்பேஸ் பிரிவு உள்நாட்டு டிஃபென்ஸ் ஒப்பந்தம் ஒன்றை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் வருடத்திற்கு **₹33 கோடி** வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்றுமதி சந்தையைத் தாண்டி, உள்நாட்டு சந்தையிலும் தனது பிடியை வலுப்படுத்தும் முயற்சியில் நிறுவனம் இறங்கியுள்ளது.
புதிய ஒப்பந்தம் என்ன?
Raymond Limited நிறுவனத்தின் ஏரோஸ்பேஸ் பிரிவு சுமார் 300-க்கும் மேற்பட்ட பாகங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இதில் பிரீசிஷன் மெஷினரிங் மற்றும் ஸ்டரக்சுரல் காம்போனன்ட்கள் அடங்கும். ஆண்டுக்கு சுமார் 37,000 பாகங்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி பணி 2026 மற்றும் 2027-ம் ஆண்டுகளில் முழுவீச்சில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ச்சிப் பாதை
இந்த ஒப்பந்தம் மூலம், அந்நிறுவனம் தனது ஏற்றுமதி சார்ந்த பிசினஸ் மாடலை மாற்றி, உள்நாட்டு டிஃபென்ஸ் சந்தையில் கால்பதித்துள்ளது. ஏரோஸ்பேஸ் பிரிவு ஏற்கனவே வலுவான வளர்ச்சியில் உள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், அதன் வருவாய் 40% உயர்ந்து ₹123 கோடியாக இருந்தது. தற்போது அந்நிறுவனத்தின் ஆர்டர் பேக்லாக் (Backlog) மதிப்பு சுமார் ₹5,960 கோடியை தாண்டியுள்ளது.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது
ஆர்டர்கள் குவிந்தாலும், கம்பெனியின் பணப்புழக்கத்தை (Cash Flow) முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். கடந்த நிதியாண்டில் நிறுவனம் ₹72 கோடி நெகட்டிவ் ஃப்ரீ கேஷ் ஃபுளோவைக் கொண்டிருந்தது. டிஃபென்ஸ் ஒப்பந்தங்களுக்கு ஆரம்பகட்ட முதலீடுகள் (Inventory & Machinery) அதிகமாக தேவைப்படும் என்பதால், வொர்க்கிங் கேபிடல் மேனேஜ்மென்ட் மிக முக்கியம்.
சந்தை நிலவரம்
இந்த செய்தியைத் தொடர்ந்து, National Stock Exchange-ல் Raymond ஷேர் விலை சுமார் 17% உயர்ந்து, ₹1,002.80-ல் முடிவடைந்தது. எக்ஸிகியூஷன் ரிஸ்க் மற்றும் லாப வரம்பு (Profit Margins) எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
